பதிவு செய்த நாள்
29 நவ2017
23:51
புதுடில்லி : மியூச்சுவல் பண்டு திட்டங்களில், எஸ்.ஐ.பி., எனப்படும், தவணை முறையில் முதலீடு செய்யும் திட்டத்திற்கு, வரவேற்பு அதிகரித்து வருகிறது. இத்திட்டத்தில், வாரம், மாதம், காலாண்டுகளில் குறைந்தபட்சம், 500 ரூபாய் முதலீடு செய்யலாம்.
பங்குச் சந்தையின் அன்றாட ஏற்ற, இறக்கத்தை கவனிக்க தேவையின்றி, முதலீட்டில் ஒழுங்குமுறையை ஏற்படுத்த, எஸ்.ஐ.பி., திட்டம் உதவுகிறது. தற்போது, பங்குச் சந்தை சிறப்பாக உள்ளதாலும், மியூச்சுவல் பண்டு முதலீடுகள் குறித்த விழிப்புணர்வு பெருகி வருவதாலும், இத்திட்டத்தில் முதலீடு அதிகரிக்கிறது. அக்டோபரில், இத்திட்டத்தில், 5,600 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
இது, கடந்த ஆண்டு இதே மாதத்தை விட, 3,434 கோடி ரூபாயை விட, அதாவது, 64 சதவீதம் அதிகம். நடப்பு நிதியாண்டில், ஏப்., – அக்., வரையிலான, ஏழு மாதங்களில், எஸ்.ஐ.பி., திட்டங்கள் மூலம், 34,887 கோடி ரூபாய் முதலீட்டை, மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் ஈர்த்துள்ளன. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 23,584 கோடி ரூபாயாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|