பதிவு செய்த நாள்
29 நவ2017
23:53
புதுடில்லி : ‘ஏற்றுமதியாளர்கள், ஜூலை – அக்., வரை, ஏற்றுமதி செய்த வகையில் முன்கூட்டி செலுத்திய, 6,500 கோடி ரூபாய் வரியை, திரும்ப அளிக்கக் கோரி விண்ணப்பித்து உள்ளனர்’ என, நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்த அறிக்கை விபரம்: ஜூலை – அக்., வரையிலான நான்கு மாதங்களில், ஐ.ஜி.எஸ்.டி., வாயிலாக செலுத்திய, 6,500 கோடி ரூபாய் வரியை திரும்ப தரக் கோரி, ஏற்றுமதியாளர்கள் கோரி உள்ளனர். இதில், ஜூலைக்கான தொகையில், பெரும்பகுதி திரும்பத் தர ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. ஆக., – செப்., –அக்., மாதங்களுக்கான தொகைக்கும், அடுத்தடுத்து ஒப்புதல் தரப்படும்.
ஏற்றுமதியாளர்கள், ஆவணங்களை பதிவேற்றும் போது, தவறான வங்கி கணக்கு, விலைப் பட்டியலுக்கும், ஐ.ஜி.எஸ்.டி., தொகைக்கும் வித்தியாசம் இருப்பது போன்ற காரணங்களால், செலுத்திய வரியை திரும்பத் தருவதில் தாமதம் ஏறுபடுகிறது. ஆக., மாதத்திற்கான இறுதி விற்பனை அறிக்கையை, ஜி.எஸ்.டி.ஆர்., – 1 படிவத்தில் பூர்த்தி செய்து, ஜி.எஸ்.டி.என்., வலைதளத்தில், டிச., 4 முதல் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|