பதிவு செய்த நாள்
29 நவ2017
23:53
புதுடில்லி : வலைதளங்களில் புழங்கும் மெய்நிகர் கரன்சியான, ‘பிட்காயின்’ மதிப்பு, நேற்று முதன்முறையாக, 10 ஆயிரம் டாலரை தாண்டியது. இது, ரூபாய் மதிப்பில், 6.6௮ லட்சம் ஆகும்.
பிட்காயின் மதிப்பு, இந்தாண்டு துவக்கத்தில், 1,000 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, வளைதளங்களில் புழங்கும் பிட்காயின் மொத்த மதிப்பு, 16,700 கோடி டாலரை தாண்டி உள்ளது. ஜப்பானைச் சேர்ந்த, சகோஷி சகாமோட்டோ என்பவரால், 2009 ஜன., 3ல், பிட்காயின் அறிமுகப்படுத்தப்பட்டது. எந்தவொரு கட்டுப்பாட்டு அமைப்புமின்றி, சாப்ட்வேர் குறியீடுகள் மூலம், பிட்காயின் உள்ளிட்ட, மெய்நிகர் கரன்சிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
பிட்காயின் பரிவர்த்தனைகள், தன்னிச்சையாக செயல்படும் பொதுவான தகவல் தொகுப்பின் கீழ் வெளியிடப்படுகின்றன. இடைத்தரகரின்றி, விற்போர் – வாங்குவோர் இடையே நடைபெறும் பிட்காயின் வர்த்தகத்தில், அதன் மதிப்பிற்கேற்ப, பணப் பரிமாற்றம் நடைபெறுகிறது. வலைதளங்களில் பொருட்கள் வாங்கவும், சேவைகளை பெறவும், இதர வர்த்தக பரிமாற்றங்களுக்கும் பிட்காயின் பயன்படுகிறது. எட்டு ஆண்டுகளுக்கு முன், 10 ஆயிரம் பிட்காயின் அளித்தால், இரண்டு, ‘பிசா’ உணவு மட்டுமே கிடைக்கும் நிலை இருந்தது. இந்தாண்டு மட்டும், பிட்காயின் மதிப்பு, 800 சதவீதம் உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின், சி.எம்.இ., குழுமம், பிட்காயின் முன்பேர சந்தையை, இந்தாண்டு துவக்க உள்ளதாக அறிவித்திருப்பதும், பிட்காயின் பரிவர்த்தனையை கட்டுப்படுத்தும், ‘செக்விட் 2 எக்ஸ்’ திட்டம் கைவிடப்பட்டதும், இந்த உயர்வுக்கு காரணம் என, கூறப்படுகிறது. இந்நிலையில், ‘எந்த நேரத்திலும், பிட்காயின் மதிப்பு அதள பாதாளத்திற்கு சரிய வாய்ப்பு உள்ளது’ என, நிதி வல்லுனர்கள் எச்சரித்து உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|