பதிவு செய்த நாள்
02 டிச2017
00:00
புதுடில்லி:‘‘வணிகர்கள் சுலபமாக வியாபாரம் செய்யவும், வணிகத்தை விரிவுபடுத்தவும், ஜி.எஸ்.டி., உதவி உள்ளது,’’ என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்து உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:மத்திய அரசின், பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., ஆகிய அடிப்படை சீர்திருத்தங்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, நடுத்தரம் மற்றும் நீண்ட கால அளவில் பயனளிக்கும்.வர்த்தகம் புரிவதை, ஜி.எஸ்.டி., சுலபமாக்கி உள்ளது. ஒவ்வொரு வியாபாரியின் சந்தை வாய்ப்பும் அதிகரித்துள்ளது. தற்போது, வணிகர்களுக்கு, நாடு முழுவதும் சந்தையாக மாறி உள்ளது. மேலும், ஜி.எஸ்.டி., செலுத்துவதை சுலபமாக்கி உள்ளது. வர்த்தகர்கள், பல வகை வரிக் கணக்குகளை தாக்கல் செய்யும் முறைக்கு முடிவு கட்டப்பட்டு உள்ளது. வரி விகிதமும், சீராக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.வலைதளம் வாயிலாகவே, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்யப்படுவதால், வர்த்தகர்கள், வரித்துறை அதிகாரிகள் முன் ஆஜராகி, கணக்கு விபரங்களை விளக்க தேவைஇல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|