‘வியாபாரம் செய்வதை ஜி.எஸ்.டி., சுலபமாக்கி உள்ளது’‘வியாபாரம் செய்வதை ஜி.எஸ்.டி., சுலபமாக்கி உள்ளது’ ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு ...
ஜி.எஸ்.டி., குறைப்பு; தேவை உயர்வால்... சிறப்பான வளர்ச்சியில் தயாரிப்பு துறை ‘நிக்கி – மார்கிட்’ ஆய்வறிக்கை வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2017
00:03

புது­டில்லி:‘ஜி.எஸ்.டி., குறைப்பு; தேவை உயர்வு; புதிய, ‘ஆர்­டர்’ அதி­க­ரிப்பு போன்­ற­வற்­றால், நவம்­ப­ரில், தயா­ரிப்­புத் துறை­யின் உற்­பத்தி, சிறப்­பாக வளர்ச்சி கண்­டுள்­ளது’ என, ‘நிக்கி – மார்­கிட்’ ஆய்­வ­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.
அதன் விப­ரம்:ஜி.எஸ்.டி., குறைப்­பால், 13 மாதங்­களில் இல்­லாத அள­விற்கு, தயா­ரிப்­புத் துறை­யின் உற்­பத்தி அதி­க­ரித்­துள்­ளது. நிறு­வ­னங்­க­ளுக்கு, அதி­க­ள­வில் புதிய, ‘ஆர்­டர்’கள் கிடைத்­துள்ளன. அதற்­கேற்ப, சந்­தை­யில் பொருட்­க­ளுக்­கான தேவை­யும் பெருகி உள்­ளது.இதன் கார­ண­மாக, தயா­ரிப்­புத் துறை உற்­பத்தி வளர்ச்­சியை குறிக்­கும், என்.ஐ.எம் – பி.எம்.ஐ., குறி­யீடு, நவம்­ப­ரில், 52.6 புள்­ளி­க­ளாக உயர்ந்­துள்­ளது. இது, அக்­டோ­ப­ரில், 50.3 புள்­ளி­க­ளாக இருந்­தது.
தொடர்ந்து நான்கு மாதங்­க­ளாக, தயா­ரிப்­புத் துறை­யின் வளர்ச்­சியை குறிக்­கும் வகை­யில், இக்­கு­றி­யீடு, 50 புள்­ளி­களை தாண்டி நிற்­கிறது. ஆய்­வில் பங்­கேற்ற நிறு­வ­னங்­கள், ஜி.எஸ்.டி.,குறைப்­பால், உற்­பத்தி அதி­க­ரித்து இருப்­ப­தாக தெரி­வித்து உள்ளன.இத­னால், 2012 செப்­டம்­ப­ருக்கு பின், இந்­தாண்டு நவம்­ப­ரில் தான், மிக அதி­க­ள­வில், வேலை­வாய்ப்பு விகி­த­மும் உயர்ந்­துள்­ளது.
உள்­நாடு மட்­டு­மின்றி, வெளி­நா­டு­க­ளி­லும், இந்­திய பொருட்க­ளுக்­கான தேவை பெருகி வரு­கிறது. மூன்று மாதங்­களில் இல்­லாத வகை­யில், முதன்­மு­றை­யாக, நவம்­ப­ரில், மிக அதிக அள­வி­லான வெளி­நாட்டு, ‘ஆர்­டர்’களை தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் பெற்­றுள்ளன.அதே சம­யம், மூலப்­பொ­ருட்­கள் விலை உயர்­வால், நிறு­வ­னங்­களின் தயா­ரிப்பு செல­வும் அதி­க­ரித்­துள்­ளது. ஏப்., முதல், மூலப்­பொ­ருட்­கள் விலை உயர்ந்து வரு­கிறது. இத­னால், ஜி.எஸ்.டி., குறைப்­பால் கிடைத்த பயன் முழு­வ­தை­யும்,வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அளிக்க முடி­யாத நிலை­யில் நிறு­வ­னங்­கள் உள்ளன.
மூலப்­பொ­ருட்­கள் விலை உயர்ந்து, தயா­ரிப்பு செலவு அதி­க­ரித்து உள்­ள­தால், ரிசர்வ் வங்கி, வரும் வாரம், ‘ரெப்போ’ விகி­தத்தை குறைப்­ப­தற்­கான வாய்ப்­பும் குறை­வா­கவே உள்­ளது.மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, ஐந்து காலாண்­டு­க­ளாக குறைந்­துள்­ளது. நடப்பு நிதி­யாண்­டின், ஏப்., – ஜூன் வரை­யி­லான காலாண்­டில், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, மூன்று ஆண்­டு­களில் இல்­லாத அள­விற்கு, 5.7 சத­வீ­த­மாக சரி­வ­டைந்து உள்­ளது.
இந்­நி­லை­யில், புதிய, ஜி.எஸ்.டி., முறைக்கு மாறு­வ­தில் உள்ள சங்­க­டங்­கள் குறைந்­துள்ளன. தயா­ரிப்­புத் துறை­யின் உற்­பத்­தி­யும் அதி­க­ரித்­துள்­ளது. இத­னால், ஜூலை –செப்., வரை­யி­லான இரண்­டா­வது காலாண்­டில், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 6.3 சத­வீ­த­மாக வளர்ச்சி கண்­டுள்­ளது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
ஓராண்டுக்கு பின்தயா­ரிப்­புத் துறை­யில், 2016 அக்­டோ­ப­ருக்கு பின், நவம்­ப­ரில் தான், அதிக அள­விற்கு புதிய, ‘ஆர்­டர்’கள் அதி­க­ரித்­துள்ளன; உற்­பத்தி வளர்ச்சி விகி­த­மும் உயர்ந்­துள்­ளது. இதற்கு, ஜி.எஸ்.டி., குறைப்­பும், தேவை அதி­க­ரிப்­புமே கார­ணம். இந்த வளர்ச்சி தொட­ரும்.
ஆஷ்னா தோதியா
பொருளாதார வல்லுனர், ஐ.எஸ்.எஸ்., மார்கிட்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)