பதிவு செய்த நாள்
02 டிச2017
15:21
புதுடில்லி: ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்களுடனான போட்டியை எதிர்கொள்ள பாரதி ஏர்டெல் நிறுவனம் இரண்டு புதிய பிரீபெயிட் திட்டங்களை அறிவித்துள்ளது. ரூ.199க்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. வோடபோன் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஏர்டெல் புதிய திட்டத்தில் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், ரோமிங்கின் போது அன்லிமிட்டெட் இன்கமிங் அழைப்புகள், அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் எஸ்.எம்.எஸ்., தினமும் 1 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. புதிய திட்டம் பழைய மற்றும் புதிய ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
எனினும் புதிய ஏர்டெல் திட்டம் சென்னை, டில்லி, மும்பை மற்றும் கர்நாடகா உள்ளிட்ட டெலிகாம் வட்டாரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் மை ஏர்டெல் ஆப் மூலம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் வழங்ககப்படுகிறது. இத்துடன் ஏர்டெல் வலைத்தளம் சென்றும் புதிய திட்டத்தை பெற முடியும்.
முன்னதாக வோடபோன் நிறுவனம் ரூ.199 விலையில் பிரீபெயிட் திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்கள் பயன்படுத்த முடியும். இந்த கெடு நிறைவுற்றதும் அனைத்து அழைப்புகளும் நிமிடத்திற்கு 30 பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|