பதிவு செய்த நாள்
02 டிச2017
16:19
புதுடில்லி : இன்போசிஸ் நாராயண மூர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இந்நிறுவனத்தின் சிஇஓ.,வாக இருந்த விஷால் சிக்கா ஆகஸ்ட் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் இப்போசிஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பு காலியாக இருந்து வந்தது. புதிய சிஇஓ.,வை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட வந்த இன்போசிஸ், 2018 ம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் புதிய சிஇஓ நியமிக்கப்படுவார் என கூறி இருந்தது. தற்போது தற்காலிக சிஇஓ.,வாக பிரவின் ராவ் இருந்து வருகிறார்.
இந்நிலையில் புதிய சிஇஓ.,வாக சலீல் எஸ்பரேக்கை நியமித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 2018 ம் ஆண்டு ஜனவரி 2 ம் தேதி வரை பிரவின் ராவே சிஇஓ.,வாக இருப்பார் எனவும், அதன் பிறகு சலீல் புதிய சிஇஓ.,வாக பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|