பதிவு செய்த நாள்
03 டிச2017
00:27
‘ஹோண்டா மோட்டர் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா, சில வாரங்களுக்கு முன் அறிமுகம் செய்த, ‘கிராசியா’ ஸ்கூட்டர், விற்பனையில் சக்கை போடு போடுவதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக, எல்.இ.டி., முகப்பு விளக்குகளுடன் அறிமுகமான கிராசியாவில், ‘இகோ ஸ்பீடு’ எனும், புதிய அம்சம் இடம் பெற்றுள்ளது. அது, வாகன ஓட்டி, எரிபொருள் சிக்கனத்துக்கு உதவும் வகையில், வாகனத்தை இயக்குவதற்கு, சமிக்ஞை தரும். மேலும், ‘போர் இன் ஒன் லாக், பிரன்ட் பாக்கெட், ஸ்மார்ட் போன் சார்ஜ்’ போன்ற வசதிகளும், வாடிக்கையாளர்களை கவர்பவையாக உள்ளன. அதனால், களமிறங்கிய மூன்று வாரங்களில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, ‘கிராசியா’ ஸ்கூட்டர்கள் விற்பனை ஆகியிருப்பதாக, ஹோண்டா தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|