பதிவு செய்த நாள்
03 டிச2017
00:31
இந்தியாவில் இதுவரை இல்லாத, ‘குவாட்ரி சைக்கிள்’ வகை வாகனம், இனி, சாலைகளில் இயங்கும். 2008ல், பஜாஜ் நிறுவனம், மூன்று சக்கர வாகனங்களின் தன்மையை உடைய, நான்கு சக்கரங்களாலான, கார் போன்ற தோற்றமுடைய, இந்த வாகனத்தை காட்சிப்படுத்தியது.
காரும் அல்லாத, மூன்று சக்கர வாகனமும் அல்லாத குவாட்ரி சைக்கிளை, 2012ல், வர்த்தக ரீதியாக அறிமுகம் செய்ய, ‘பஜாஜ்’ முனைந்த போது, அத்தகைய வாகனம், மத்திய அரசால் வகைப்படுத்தாததால், அனுமதி கிடைக்கவில்லை. எனினும், ‘கியூட்’ என பெயரிட்டு, அதை, ஏற்றுமதி செய்ய துவங்கியது.
இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு பின், அந்த வாகனத்துக்கு, மத்திய அரசு, தற்போது அனுமதி அளித்துள்ளது. அது தொடர்பான கருத்து தெரிவிக்க, மத்திய அரசு ஒரு மாத அவகாசம் அளித்துள்ளது. எனினும், கிட்டத்தட்ட அதற்கு அனுமதி கிடைப்பது உறுதியாகிவிட்டது. இது, உருவத்தில் மிகச் சிறியது. மேலும், 70 கி.மீ., தான் உச்சபட்ச வேகம். அதனால், நெடுஞ்சாலைகளில் இதை ஓட்டுவது சற்று சிரமம்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|