பதிவு செய்த நாள்
03 டிச2017
00:36
புதுடில்லி:வர்த்தக வாய்ப்புகள் அதிகரித்து வருவதால், நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில், வரும் ஆண்டு களில், சில்லரை விற்பனை துறைக்கு, சிறப்பான வளர்ச்சி காத்திருப்பதாக, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.இந்தியாவின் சில்லரை விற்பனை துறை குறித்து, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான, ஜே.எல்.எல்., மற்றும் இந்திய தொழிலக கூட்டமைப்பான – சி.ஐ.ஐ., இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:கடந்த, 2006 – 17 வரையிலான, 10 ஆண்டுகளில், இந்திய பெரு நகரங்களில், சில்லரை விற்பனை துறையின் முதலீடு, 129 கோடி டாலர் என்ற அளவிற்கே உள்ளது.
அதே சமயம், இதே காலத்தில், நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில், சில்லரை விற்பனை துறையின் முதலீடு, 619 கோடி டாலர் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.பெரு நகரங்களில், சில்லரை விற்பனை கடைகளை அமைப்பதற்கான இடம் கிடைப்பது, கடினமாக உள்ளது. மேலும், கடைகளுக்கான குத்தகை அல்லது வாடகை தொகையும், மிக அதிகமாகவசூலிக்கப்படுகிறது.அதனால், பலவகை பொருட்களை, சில்லரையில் விற்பனை செய்யும் துறையைச் சேர்ந்தோரின் இலக்கு, நகர்ப்புறங்கள் மற்றும் சிறிய நகரங்களின் பக்கம் திரும்பி வருகிறது.லக்னோ, கொச்சி, புவனேஸ்வர், நாக்பூர் போன்ற நகரங்களில், சர்வதேச விமான போக்குவரத்து சேவை வசதி உள்ளது.
இதன் காரணமாக, இது போன்ற நகரங்களில், பன்னாட்டு நிறுவனங்கள், சில்லரை விற்பனை கடைகளை அமைப்பதிலும், ஏற்கனவே உள்ள வர்த்தகத்தை விரிவுபடுத்துவதிலும் ஆர்வம் காட்டுகின்றன.மக்களிடம் செலவழிப்பு வருவாய் அதிகரித்திருப்பதும், சில்லரை விற்பனை துறையின் வளர்ச்சிக்கு துணை புரிகிறது.‘‘சிறிய நகரங்களில், அனைத்து மட்டத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்திய பொருளாதாரத்தின் ஆற்றல், சிறிய நகரங்களின் வளர்ச்சியில் அடங்கி இருக்கிறது.
‘‘இதை கருதி, சில்லரை விற்பனை துறைக்கு, சிறப்பான வர்த்தக வாய்ப்புகள் உள்ள நகரங்கள், சிறிய நகரங்கள் ஆகியவற்றின், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்,’’ என்கிறார், சி.ஐ.ஐ., இயக்குனர், சந்திரஜித் பானர்ஜி.நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, சில்லரை விற்பனை வாயிலான, நகரங்கள் மற்றும் சிறியநகரங்களின் பங்களிப்பு அதிகரிக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய கொள்கை
மத்திய அரசு, சில்லரை விற்பனை உட்பட, அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும், கொள்கைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.ஆற்றல்மிக்க சில்லரை விற்பனை துறை, தயாரிப்பு, விவசாயம் மற்றும் சேவை துறைகளின் வளர்ச்சியில், முக்கிய பங்களிப்பை வழங்கும். இத்துறையில், பல ஆண்டுகளாக உள்ள, அமைப்பு சாரா நிறுவனங்களை வெளியேற்றுவது போன்ற செயல்களில், அமைப்பு சார்ந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈடுபடக் கூடாது. மாறாக, இணைந்து செயல்பட்டு, வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். பொருட்கள் விலையை நியாயமாக நிர்ணயிக்க வேண்டும். இது, ஒட்டுமொத்த துறையின் வளர்ச்சிக்கு உதவும்.சுரேஷ் பிரபு, மத்திய வர்த்தகம் – தொழில் துறை அமைச்சர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|