பதிவு செய்த நாள்
03 டிச2017
23:50
உலகில் முதன்முதலாக டச் கிழக்கிந்திய கம்பெனி, 1602ம் ஆண்டு மக்களுக்கு பங்குகளை வெளியிட்டது. அன்று முதல் 400 ஆண்டுகளாக மக்கள், வங்கி, பங்குச் சந்தை, பத்திரங்கள், ரியல் எஸ்டேட், தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்து வருகின்றனர். நான்கு நுாற்றாண்டுகளுக்குப்பின், பணத்தை முதலீடு செய்வதற்கு புதிதாக, ‘கிரிப்டோகரன்சி’ எனும் ‘மறைகுறியீட்டு நாணயம்’ வந்துள்ளது.
பிட்காய்னில் ஒருவர், 2017 ஜனவரியில், 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், தற்போது அதன் மதிப்பு, 1 லட்சமாக உயர்ந்திருக்கும். இது ஆயிரம் மடங்கு வளர்ச்சி!‘பிட்காய்ன்’ என்றால் என்ன?பிட்காய்ன் என்பது ஒரு மெய்நிகர் கரன்சி. இதை கண்ணால் பார்க்க முடியாது; கையால் தொட்டு உணர முடியாது. 2009ல், ‘சட்தோஷி நகமோடோ’ என்ற புனை பெயர் கொண்ட, கம்ப்யூட்டர் இன்ஜினியரால் உருவாக்கப்பட்டது. இதை கணினியில் உள்ள, ‘அல்காரிதம்’ வகை கணிதத்தை பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர். இந்த வழிமுறையில் பிட்காயின் உருவாக்குவதை மைனிங் (mining) என குறிப்பிடுகின்றனர். இது இணையம் மூலம் நடைபெறுகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி, உலக வங்கி போன்ற எந்த அமைப்பும் கிடையாது.எங்கு மதிப்பு அதிகம்?பிட்காய்ன் உருவாக்கும் போதே மொத்தம், 2.1 கோடி பிட்காய்ன் மட்டுமே உருவாக்க முடியும் என, புரோகிராம் செய்யப்பட்டிருக்கிறது.
எப்படி பெறுவது?இரண்டு வழிகளில் பிட்காய்ன் பெறலாம். உலகளவில் உள்ள மெய்நிகர் கரன்சி எக்சேஞ்ச் மையங்களில், பான்கார்டு, ஆதார் கார்டு கொடுத்து இந்த டிஜிட்டல் கரன்சிகளை பெறலாம். மற்றொரு வழி, மைனிங் நிறுவனங்கள் மூலமும் பெறலாம். பிட்காய்ன் பரிவர்த்தனைகளுக்கு ஒப்புதல் வழங்கும் நிறுவனங்களுக்கு ‘மைனிங் நிறுவனங்கள்’ என்று பெயர்.
மைனிங் எப்படி?கஷ்டமான கணக்குகளை செய்வதற்கு கம்ப்யூட்டர் பயன்படுகிறது. இதுபோல கணித அல்காரிதத்தை பயன்படுத்தி பிட்காய்ன்கள் மைனிங் செய்யப்படுகின்றன. இதுவரை, 1.6 கோடி பிட்காய்ன்கள் உருவாக்கப்பட்டு மைனிங் செய்யப்பட்டுள்ளன. இன்னும், 50 லட்சம் பிட்காய்ன்கள் மட்டுமே மைனிங் செய்யப்பட வேண்டும்.
ஆபத்தானதா?பிட்காய்ன் முதலீடு ஆபத்தான ஒன்று தான். 2013 நவம்பரில் பிட்காய்ன், 60 ஆயிரம் ரூபாயாக இருந்தது. அதே ஆண்டு டிசம்பரில், 31 ஆயிரம் ரூபாயாக குறைந்தது. ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், இதை நீண்டகாலம் வைத்திருந்தால் அதிக மதிப்பை பெற்றுத்தரும்.
சட்டப்பூர்வமானதா?
இந்தியாவில் இதுவரை பிட்காய்ன் பரிவர்த்தனைகளுக்கு எவ்வித சட்டப்பூர்வ அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. இருப்பினும், இந்தியாவில் முதலீட்டாளர்கள் பிட்காய்ன்களை வாங்கி, விற்று வருகின்றனர். இணைய புரட்சியின் மூலமாக, தற்போது நாம் தொடர்பு கொண்டு வருகிறோம். அது போல, இணையம் மூலம் இந்த பிட்காய்னில் பணம் ஈட்டப்படும்.
இரண்டு விதமான கருத்து
பிட்காய்ன் பற்றி இரண்டு விதமான கருத்து நிலவுகிறது. ஒரு பிரிவினர், பிட்காய்ன் எதிர்கால உலகின் பணம் என, நம்பிக்கை வைத்துள்ளனர்; மற்றொரு பிரிவினர் இது முற்றிலும் ஏமாற்று வேலை என்கின்றனர்.
நீங்கள், ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பக் கூடியவராகவும், விடாமுயற்சி உடையவராகவும் இருந்தால், இத்துறையில் முதலீடு செய்து வருவாய் ஈட்டும் வாய்ப்பு உண்டு.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|