பதிவு செய்த நாள்
06 டிச2017
00:26
புதுடில்லி;''விரைவில் அறிமுகமாக உள்ள, நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில், நேரடி விற்பனை துறையை கொண்டு வர, அரசு திட்டமிட்டு உள்ளது,'' என, நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலர், அவினாஷ் ஸ்ரீவத்ஸவா தெரிவித்து உள்ளார்.
அவர், 'பிக்கி' அமைப்பின் கருத்தரங்கில் மேலும் பேசியதாவது:நேரடி விற்பனை திட்டத்திற்கான விதிமுறைகளை, மத்திய அரசு, 2016ல் வெளியிட்டது. இது, 'பொன்ஸி' போன்ற குலுக்கல் திட்டங்களில் இருந்து, நேரடி விற்பனை முறையை பிரித்து, ஒரு ஒழுங்குமுறையை ஏற்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், சத்தீஸ்கர் மற்றும் அசாம் மாநிலங்கள் மட்டுமே, இந்த விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளன.சட்ட அந்தஸ்து இல்லாததால், இந்த விதிமுறைகளை பின்பற்றுவதில், மாநிலங்கள் மெத்தனமாக உள்ளன.
அதனால், விரைவில் அறிமுகமாக உள்ள, நுகர்வோர் பாதுகாப்பு மசோதாவில், நேரடி விற்பனையையும் சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.இது, பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டு, சட்ட வடிவம் பெறும் போது, அதற்கான விதிமுறைகள் உருவாக்கப்படும். அனைத்து மாநிலங்களும், நேரடி விற்பனை சட்டத்தை அமல்படுத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|