பதிவு செய்த நாள்
06 டிச2017
00:27
புதுடில்லி:அன்னிய வர்த்தக கொள்கையின் இடைக்கால சீராய்வு அறிக்கையை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு, நேற்று வெளியிட்டார்.அதன் விபரம்:=ஏற்றுமதியை மேம்படுத்த, 8,450 கோடி ரூபாய்க்கு ஊக்கச்சலுகை= ஏற்றுமதிக்காக, வரி விலக்குடன் மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு, சுய சான்றளிக்கும் திட்டம் அறிமுகம்= இறக்குமதி பொருட்களுக்கு, ஏற்றுமதியாளர்கள் பெறும் வரி விலக்கு சலுகை காலம், 18லிருந்து, 24 மாதங்களாக அதிகரிப்பு= எம்.இ.ஐ.எஸ்., திட்டத்தில் வரிச்சலுகை, 2லிருந்து, 4 சதவீதமாக உயர்வு. இதனால், தொழிலாளர் சார்ந்த, தோல், கைவினைப் பொருட்கள், வேளாண்மை, கடல்சார் துறை, மின்னணு உபகரணங்கள், விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட துறைகள் பயன்பெறும்= சேவைகள் துறைக்கான, எஸ்.இ.ஐ.எஸ்., திட்டத்தில், வரிச்சலுகை, 2 சதவீதம் உயர்வு. இத்திட்டத்தில், கல்வி, மருத்துவம், ஓட்டல், வர்த்தகம், சட்டம், உள்ளிட்ட துறைகள் பயனடையும்=சேவை துறைக்கு, ஆண்டுக்கு, 1,140 கோடி ரூபாய் ஊக்கச்சலுகை= சிறு தொழில்களுக்கு வரிச்சலுகை, 2 சதவீதம் உயர்வு= டி.ஜி.எப்.டி., வலைதளத்தில், வியாபார விசாரணைக்கு ஒற்றைச் சாளர தகவல் வசதி= ஏற்றுமதியாளர்களுக்கு உதவ தனி குழு= செலுத்திய வரியை திரும்பப் பெறுவதில், தாமதத்தை குறைக்க நடவடிக்கை= அழுகும் வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கு, ஒற்றைச் சாளர அனுமதி= ஒரு சரக்கின் ஏற்றுமதி அல்லது இறக்குமதிக்கு கட்டாயம் தர வேண்டிய ஆவணங்கள், 3 ஆக குறைப்பு= அனைத்து ஏற்றுமதிக்கும், வாரத்தில், 7 நாட்களும், 24 மணி நேர அனுமதி= எந்த காரணத்திற்காகவும், ஏற்றுமதியாகும் சரக்கு நிறுத்தி வைக்கப்பட மாட்டாது= ஏற்றுமதியாகும் சரக்கிற்கு காப்பீட்டு வசதிஇவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|