பதிவு செய்த நாள்
06 டிச2017
23:56
கோல்கட்டா:‘‘தேயிலை வாரியத்தை, இதர வாரியங்களுடன் இணைக்கும் திட்டத்தை, மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது,’’ என, தேயிலை வாரிய தலைவர், பி.கே.பேஜ்பரூவா தெரிவித்து உள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:
தேயிலை வாரியம், காபி வாரியம், ரப்பர் வாரியம், மசாலா பொருட்கள் வாரியம் ஆகியவற்றை இணைத்து, ஒரே குடையின் கீழ் கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதில், தற்போது இதர வாரியத்துடன், தேயிலை வாரியத்தை இணைக்கும் திட்டம், நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
தற்போது, தேயிலை வாரியம் தனியாகவே செயல்படும். இந்திய தேயிலைக்கு, வெளிநாடுகளில் பெரும் வரவேற்பு உள்ளது. இதை பயன்படுத்தி, தேயிலை ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். புதிய சந்தைகளை அடையாளம் காண்பதன் மூலம், தேயிலை ஏற்றுமதி இலக்கை சுலபமாக எட்ட முடியும்.
அமைப்பு சார்ந்த துறையினருடன், சிறிய தேயிலை விவசாயிகள் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும். மொத்த உற்பத்தியில், சிறிய தேயிலை விவசாயிகள் பங்களிப்பு, 46 சதவீதமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|