பதிவு செய்த நாள்
11 டிச2017
00:36
வருமான
வரித்துறையிடம் இருந்து வந்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி
வலை விரிக்கும் மோசடி மெயில்களை கண்டறிவதில் எச்சரிக்கையுடன்
இருப்பது அவசியமாகிறது.
இத்தகைய மோசடி மெயில்களை இனம்
காண்பது எப்படி மற்றும் இவை இன்பாக்சை தேடி வரும்போது என்ன செய்ய
வேண்டும் என்பது பற்றி ஒரு பார்வை:
பொதுவாக ஏமாற்றுக்காரர்கள், வரித்துறை அனுப்பி வைத்துள்ளது போன்ற தோற்றத்தை அளிக்கும் இ – மெயிலை அனுப்பி வைத்து, அதில் உள்ள இணைப்பை, ‘கிளிக்’ செய்யத் துாண்டுவது வழக்கம். இப்படி
கிளிக் செய்தவுடன் போலி இணையதளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு,
அதில் பான் கார்டு எண், வங்கி கணக்கு போன்ற முக்கிய விபரங்களை
சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவர்.
இந்த தகவல்களை கொண்டு விஷமிகள் பணத்தை சுருட்ட முயற்சிப்பர். இத்தகைய மெயில்களை அடையாளம் கண்டு, விழிப்புடன் இருக்க வேண்டும். இவை அதிகாரபூர்வ தளத்தில் இருந்து வருவது போன்ற தோற்றத்தை கொண்டிருப்பது நிலைமையை சிக்கலாக்கலாம் என்றாலும், வருமான வரித்துறை அனுப்பும் மெயில்கள், பயனாளிகள் பதில் அளிக்க அவசியம் இல்லாத, ‘ஆட்டோ ஜெனரேட்டட் மெயில்’கள் என்பதை உணர வேண்டும்.
வருமான
வரித்துறை எந்த விதமான தகவல்களையும் இ – மெயில் வாயிலாக கோருவது
இல்லை என்பதையும் அறிய வேண்டும். எனவே, பாஸ்வேர்டு மற்றும் கிரெடிட்
கார்டு விபரங்களை சமர்ப்பிக்கும் மெயில்கள் எனில் உஷாராகி விட
வேண்டும்.இ – மெயில் அனுப்பியவர் பற்றிய விபரங்களை தெரிவிக்கும்
பகுதியை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம், வந்திருப்பது உண்மையான
மெயிலா அல்லது மோசடி மெயிலா என உறுதி செய்து கொள்ளலாம்.
இத்தகைய
மெயில்களை கண்டால், அவற்றுக்கு பதில் அளிக்காமல் இருப்பதோடு, அந்த
மெயில் தொடர்பாக வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
phishing@incometax.gov.in எனும் முகவரிக்கு அந்த மெயிலை பார்வேர்டு செய்யலாம். ஒருவேளை தவறுதலாக மோசடி மெயிலுக்கு பதில் அளித்திருந்தால்,
உடனடியாக வங்கிக்கு இது தொடர்பாக தகவல் தெரிவித்து, கார்டை
முடக்குவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|