பதிவு செய்த நாள்
12 டிச2017
00:50
புதுடில்லி:கார்ப்பரேட் நிறுவனங்கள், அவற்றின் வர்த்தக விரிவாக்கம் உள்ளிட்ட தேவைகளுக்காக, கடன் பத்திரங்களை வெளியிட்டு, நிதி திரட்டிக் கொள்கின்றன.இந்த வகையில், நவம்பரில், கார்ப்பரேட் நிறுவனங்கள், கடன் பத்திர வெளியீடு மூலம், நிதி நிறுவனங்களிடம் இருந்து, 50,855 கோடி ரூபாய் திட்டியுள்ளன.
இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில் திரட்டப்பட்ட, 38,645 கோடி ரூபாயை விட, 32 சதவீதம் அதிகம். அதே சமயம், இதே காலத்தில், கடன் பத்திர வெளியீடுகள், 221லிருந்து, 145 ஆக குறைந்துள்ளன. நடப்பு நிதியாண்டில், ஏப்., – நவ., வரையிலான காலத்தில், கடன் பத்திர வெளியீடுகள் மூலம், கார்ப்பரேட் நிறுவனங்கள் திரட்டிய தொகை, 4.20 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.கடந்த, 2016 – 17ம் முழு நிதியாண்டில், இந்த வகையில், 6.40 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|