பதிவு செய்த நாள்
12 டிச2017
00:53
புதுடில்லி:டில்லியில், ‘ஆட்டோ எக்ஸ்போ’ வாகன கண்காட்சியில் பங்கேற்பதற்காக, வலைதளத்தில் பதிவு செய்யும் வசதி, நேற்று துவங்கியது.
இது குறித்து, இக்கண்காட்சியை நடத்தும், இந்திய வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் துணை இயக்குனர்,
ஜெனரல் சுகடோ சென் கூறியதாவது:டில்லியில், 2018 பிப்., 9 – 14 வரை, ‘ஆட்டோ எக்ஸ்போ’ வாகன கண்காட்சி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, bookmyshow.comல் பதிவு செய்யலாம். இக்கண்காட்சியில், வாகன துறைக்கான புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்படும்.
குறிப்பாக, மின் வாகனங்கள், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான எரிபொருட்கள், வாகனங்களில் நவீன பொழுதுபோக்கு வசதிகள், சொகுசு பயணத்திற்கு உதவும் செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் போன்றவற்றை காணலாம்.பார்வையாளர்கள், வாகன துறையில் உள்ள நவீன வசதிகளையும், எதிர்காலத்தில் அறிமுகமாக உள்ள, புதிய கண்டுபிடிப்புகளையும், ஒருங்கே காண்பதற்கான வாய்ப்பை பெறலாம்.சிறப்பு பிரிவில், இந்திய வாகன துறையின், 70 ஆண்டு கால வரலாற்றை குறிக்கும் அரங்கும் இடம் பெற உள்ளது.
கடந்த ஆண்டு, ஐந்து நாட்கள் நடந்த இக்கண்காட்சியில், 6 லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்றனர். இதன் மூலம், உலகளவில், ஒரு நாளைக்கு அதிகபட்ச பார்வையாளர்கள் வருகை தந்த கண்காட்சி என்ற சிறப்பு கிடைத்துள்ளது.
இந்த ஊக்கம் காரணமாக, அடுத்த ஆண்டு கண்காட்சி, ஆறு நாட்கள் நடைபெற உள்ளது. இதன் மூலம், பார்வையாளர்கள் வருகையில், புதிய உலக சாதனை படைப்போம் என, நம்புகிறோம்.இக்கண்காட்சியில், பாரம்பரிய வாகன நிறுவனங்களுடன், புதிதாக, தென் கொரியாவின், கியா மோட்டார்ஸ், ஜப்பானின், கவாஸ்கி உள்ளிட்ட நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|