பதிவு செய்த நாள்
13 டிச2017
11:07
புதுடில்லி : அடுத்த மூன்று மாதங்களில், கூடுதலாக பணியாளர்களை தேர்வு செய்ய உள்ள நிறுவனங்களை கொண்ட நாடுகளில், இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனமான, மேன்பவர் குரூப், 43 நாடுகளைச் சேர்ந்த, 59 ஆயிரம் நிறுவனங்களின், வேலைவாய்ப்பு குறித்து ஆய்வு நடத்தியது. அதில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், நார்வே, போலந்து, ருமேனியா ஆகிய நாடுகள், அடுத்த ஐந்து ஆண்டுகளில், அதிகளவில், பணியாளர்களை நியமிக்க உள்ளதாக தெரிவித்து உள்ளன.
அடுத்த மூன்று மாதங்களில், கூடுதலாக பணியாளர்களை நியமிக்க உள்ள நாடுகளில், தைவான், 25 சதவீதத்துடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்த இடங்களை, ஜப்பான், இந்தியா ஆகியவை, முறையே, 24 சதவீதம் மற்றும் 22 சதவீதத்துடன் பிடித்துள்ளன.
இந்தியாவில், நான்கு பிராந்தியங்களில், ஏழு தொழில் துறைகளில் பணி நியமனம் குறித்து, 4,500 நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், நடப்பு காலாண்டை விட, வரும் காலாண்டில், கூடுதல் பணியாளர்களை நியமிக்க உள்ளதாக, நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. இதில், வடக்கு பிராந்தியம், வேலைவாய்ப்பு வழங்குவதில், 32 சதவீதத்துடன் முதலிடத்தை பிடித்துள்ளது. வேலைவாய்ப்பில், சேவைகள் துறை, 27 சதவீதத்துடன் முன்னிலை வகிக்கிறது.
வளர்ச்சி அறிகுறி
சமீபகாலமாக, இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளில், வேலைவாய்ப்பு சந்தையில் காணப்பட்ட நிலையற்ற தன்மை குறைந்து வருகிறது. தொழில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளால், வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. சுரங்கம், கட்டுமானம், தயாரிப்பு, போக்குவரத்து உட்பட, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அனைத்து துறைகளிலும், வேலைவாய்ப்பு வளர்ச்சி காணப்படுகிறது.
ஏ.ஜி.ராவ், குழும நிர்வாக இயக்குனர், மேன்பவர் குரூப் இந்தியா
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|