23 நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கை  பொது துறை வங்கிகள் ஆயத்தம்23 நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கை பொது துறை வங்கிகள் ஆயத்தம் ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 64.28 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 64.28 ...
உணவு பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2017
00:08

பியூனஸ் ஏர்ஸ்:உலக வர்த்­தக அமைப்­பின் மாநாட்­டில், உணவு பாது­காப்பு குறித்த நிரந்­தர தீர்­வுக்கு, அமெ­ரிக்கா திடீ­ரென மறுப்பு தெரி­வித்­ததை அடுத்து, இந்­தியா உள்­ளிட்ட, வள­ரும்
நாடு­கள் அதிர்ச்சி அடைந்­துள்ளன.

அர்­ஜென்­டினா தலை­ந­கர் பியூ­னஸ் ஏர்­சில் நடை­பெற்ற உலக வர்த்­தக அமைப்­பின் வர்த்­தக அமைச்­சர்­கள் மாநாட்­டில், ஏழை மற்­றும் வள­ரும் நாடு­களில், பொது வினி­யோக திட்­டத்­திற்­கான உண­வுப் பொருட்­கள் கையி­ருப்பு, உண­வுப் பொருட்­க­ளுக்­கான மானிய வரம்பு உள்­ளிட்­ட­வற்­றுக்கு நிரந்­தர தீர்வு காணப்­படும் என, எதிர்­பார்க்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், அமெ­ரிக்க வர்த்­த­கத் துறை துணை பிர­தி­நிதி, ஷரன் போமர் லாரிட்­சன், ‘உண­வுப்பொருட்­கள் கையி­ருப்பு மற்­றும் மானிய வரம்பு குறித்த நிரந்­தர தீர்வை ஏற்க முடி­யாது’ என, அதி­ர­டி­யாக தெரி­வித்­தார்.

இது, மாநாட்­டில் பங்­கேற்ற, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­சர் சுரேஷ் பிரபு உட்­பட, 100க்கும் மேற்­பட்ட நாடு­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கு அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது. இதை­ய­டுத்து, அமெ­ரிக்­காவை குறிப்­பி­டா­மல், இந்­தியா வெளி­யிட்­டுள்ள அறிக்கை:கடந்த, 2015, நைரோபி மாநாட்­டில் உறுதி அளித்­த­படி, பொது வினி­யோக உண­வுப் பொருட்­கள் கையி­ருப்பு விவ­கா­ரத்­தில்,நிரந்­தர தீர்வு காண, பெரும்­பான்மை உறுப்பு நாடு­கள் சம்­ம­தம் தெரி­வித்­துள்ளன. இருந்­த­போ­தும், முக்­கிய உறுப்பு நாடு, இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன் அளித்த உறு­தி­மொ­ழியை மீறி நடந்து கொண்­டது, ஆச்­ச­ரி­யத்­தை­யும், ஏமாற்­றத்­தை­யும் அளித்­துள்­ளது.
எனி­னும், ஏழை நாடு­களின் பசியை போக்­கும் இப்­பி­ரச்­னைக்கு நிரந்­தர தீர்வு காண்­ப­தில், இந்­தியா தொடர்ந்து உறு­தி­யு­டன் இருக்­கும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

என்ன காரணம்?

உலக வர்த்­தக அமைப்­பின் விதி­மு­றைப்­படி, ஒரு நாடு உற்­பத்தி செய்­யும் உண­வுப் பொருட்­களின் மதிப்­பில், 10 சத­வீ­தத்தை மட்­டுமே உணவு மானி­ய­மாக வழங்க வேண்­டும். இதை ஏற்க, இந்­தியா உள்­ளிட்ட வள­ரும் நாடு­கள் மறுத்து வரு­கின்றன. மானி­யம் வழங்­கு­வ­தில், வளர்ந்த மற்­றும் வள­ரும் நாடு­க­ளுக்கு தனி அள­வு­கோல்­க­ளுக்கு, விதி­மு­றை­களில் திருத்­தம் செய்­ய­வும் கோரி உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)