பதிவு செய்த நாள்
14 டிச2017
00:08
பியூனஸ் ஏர்ஸ்:உலக
வர்த்தக அமைப்பின் மாநாட்டில், உணவு பாதுகாப்பு குறித்த நிரந்தர
தீர்வுக்கு, அமெரிக்கா திடீரென மறுப்பு தெரிவித்ததை அடுத்து, இந்தியா
உள்ளிட்ட, வளரும்
நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
அர்ஜென்டினா
தலைநகர் பியூனஸ் ஏர்சில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் வர்த்தக
அமைச்சர்கள் மாநாட்டில், ஏழை மற்றும் வளரும் நாடுகளில், பொது
வினியோக திட்டத்திற்கான உணவுப் பொருட்கள் கையிருப்பு, உணவுப்
பொருட்களுக்கான மானிய வரம்பு உள்ளிட்டவற்றுக்கு நிரந்தர தீர்வு
காணப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க வர்த்தகத் துறை துணை பிரதிநிதி, ஷரன் போமர் லாரிட்சன், ‘உணவுப்பொருட்கள் கையிருப்பு மற்றும் மானிய வரம்பு குறித்த நிரந்தர தீர்வை ஏற்க முடியாது’ என, அதிரடியாக தெரிவித்தார்.
இது, மாநாட்டில் பங்கேற்ற,
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு உட்பட,
100க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அதிர்ச்சியை
ஏற்படுத்தியது. இதையடுத்து, அமெரிக்காவை குறிப்பிடாமல், இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த, 2015, நைரோபி மாநாட்டில் உறுதி அளித்தபடி, பொது வினியோக உணவுப் பொருட்கள் கையிருப்பு விவகாரத்தில்,நிரந்தர தீர்வு காண, பெரும்பான்மை உறுப்பு நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன. இருந்தபோதும்,
முக்கிய உறுப்பு நாடு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் அளித்த
உறுதிமொழியை மீறி நடந்து கொண்டது, ஆச்சரியத்தையும்,
ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.
எனினும், ஏழை நாடுகளின் பசியை போக்கும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதில், இந்தியா தொடர்ந்து உறுதியுடன் இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
என்ன காரணம்?
உலக
வர்த்தக அமைப்பின் விதிமுறைப்படி, ஒரு நாடு உற்பத்தி செய்யும்
உணவுப் பொருட்களின் மதிப்பில், 10 சதவீதத்தை மட்டுமே உணவு மானியமாக
வழங்க வேண்டும். இதை ஏற்க, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் மறுத்து
வருகின்றன. மானியம் வழங்குவதில், வளர்ந்த மற்றும் வளரும்
நாடுகளுக்கு தனி அளவுகோல்களுக்கு, விதிமுறைகளில் திருத்தம்
செய்யவும் கோரி உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|