பதிவு செய்த நாள்
14 டிச2017
10:31
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று(டிச.,14) ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. மத்திய வங்கி தனது வட்டிவிகித குறைப்பை இன்று வெளியிடும் என்ற நம்பிக்கை காரணமாகவும், குஜராத் 2 ம் கட்ட தேர்தலை மனதில் கொண்டும் முதலீட்டாளர்களின் வருகை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 46.73 புள்ளிகள் உயர்ந்து 33,099.77 புள்ளிகளாகவும், நிப்டி 18 புள்ளிகள் உயர்ந்து 10,211 புள்ளிகளாகவும் உள்ளன. ஓஎன்ஜிசி, கெயில், எச்பிசிஎல், டெக் மகேந்திரா, இன்போசிஸ், ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், டிசிஎஸ், இண்டஸ்இண்ட் வங்கி, மாருதி சுசுகி உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|