தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு ... மொத்தவிலை பணவீக்கம் 3.93 சதவீதமாக உயர்வு மொத்தவிலை பணவீக்கம் 3.93 சதவீதமாக உயர்வு ...
ரூ.1 க்கு விமான டிக்கெட் : மீண்டும் வருகிறது ஏர் டெக்கான்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2017
11:41

பெங்களூரு : இந்திய விமான சேவையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் ஏர் டெக்கான். 2003 ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி இந்த நிறுவனத்தின் சேவை தொடங்கப்பட்டது. பெங்களூருவை சேர்ந்த ஜி.ஆர்.கோபிநாத் என்ற முன்னாள் ராணுவ கேப்டன் இந்த நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் 1 ரூபாய் டிக்கெட் என நிறைய அதிரடி நடவடிக்கைகள் மூலம் வேகமாக வளர்ந்து வந்தது.

இருப்பினும், ஏர் டெக்கான் விமான நிறுவனம் பல்வேறு காரணங்களால் திடீரென நஷ்டத்தை சந்திக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக 2008ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் பங்குகளை கிங்ஃபிஷர் நிறுவனம் வாங்கியது. இதைத் தொடர்ந்து, ஏர் டெக்கான் நிறுவனத்தின் லோகோ மாற்றப்பட்டது. தொடர்ந்து 2012ஆம் ஆண்டு ஏர் டெக்கான் விமான சேவை நிரந்தரமாக நிறுத்தப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த ஏர் டெக்கான் நிறுவனம் மீண்டும் தனியாக செயல்பட இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் குறைந்த விலையில் பயண கட்டணம் நிர்ணயிக்கும் ஏர் டெக்கான் விமான நிறுவனம் மீண்டும் ஒரு ரூபாயில் டிக்கெட் விற்க போவதாக அறிவித்திருக்கிறது. அதன்படி முதலில் பயணம் செய்யும் ஒருசில அதிர்ஷ்டசாலி பயணிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இன்னும் சில முக்கியமான எதிர்கால திட்டங்கள் இருப்பதாகவும் கூறப்படுள்ளது.

இந்த நிறுவனத்தை தொடங்கிய கோபிநாத் தான் மீண்டும் நிறுவனத்தை நடத்த இருக்கிறார். வரும் 22-ம் தேதியில் இருந்த விமான சேவை தொடங்கும் என கூறப்படுகிறது. ஜனவரியில் இருந்து இந்த சேவை அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். முதல் விமானம் நாசிக்கில் இருந்து மும்பை வரை செல்லும். அதற்காக பயண கட்டணம் ரூ.1 என்ற அளவில் நிர்ணயிக்க அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

''எளியவர்களும் மேகத்தில் பறக்கலாம்'' என்ற வாசகத்தோடு ஏர் டெக்கான் விமானம் பறக்க இருக்கிறது. புகழ்பெற்ற ஓவியர் ஆர்.கே லக்‌ஷ்மன் வரைந்த ஓவியம் இதில் லோகோவாக பயன்படுத்தப்பட இருக்கிறது. எளியவர்களும் விமானத்தில் பறக்கக்கூடிய வகையில் மத்திய அரசு உருவாக்கிய திட்டங்கள் தான் மீண்டும் சேவையை தொடங்கியதற்கு காரணம் என இதன் நிறுவனர் கோபிநாத் தெரிவித்திருக்கிறார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)