பதிவு செய்த நாள்
14 டிச2017
16:46
மும்பை : குஜராத் சட்டசபை தேர்தலின் 2 ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. இதனையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது.
கருத்து கணிப்பின் மீது ஏற்பட்ட எதிர்பார்ப்பின் காரணமாக முதலீட்டாளர்கள் வருகை பங்குச்சந்தையில் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்டன. இன்றைய வர்த்தக நேர முடிவில் அதிரடி உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 193.66 புள்ளிகள் உயர்ந்து 33,246.70 புள்ளிகளாகவும், நிப்டி 59.10 புள்ளிகள் உயர்ந்து 10,252.10 புள்ளிகளாகவும் உள்ளது. அதேசமயம், வட்டிவிகிதத்தை உயர்த்தும் அமெரிக்க பெடரல் வங்கியின் முடிவால் ஐரோப்பிய பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|