பதிவு செய்த நாள்
19 டிச2017
18:08
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் இரண்டாம் நாளில் புதிய உச்சத்தை தொட்டன.
குஜராத் மற்றும் இமாச்சல் மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதன் எதிரொலியாகவும், ரூபாயின் மதிப்பு உயர்வு மற்றும் முன்னணி நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதன் எதிரொலியாகவும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவங்கின. நாள் முழுக்க அந்த ஏற்றம் தொடர பங்குச்சந்தைகள் புதிய உச்சத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 235.06 புள்ளிகள் சரிந்து 33,836.74-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 74.45 புள்ளிகள் உயர்ந்து 10,463.20-ஆகவும் முடிந்தன.
முன்னதாக சென்செக்ஸ் 33,731.19 மற்றும் நிப்டி 10,452.50 புள்ளிகளை தொட்டதே அதிகபட்ச உச்சமாக இருந்தது. தற்போது அது முறியடிக்கப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|