பதிவு செய்த நாள்
19 டிச2017
23:42
புதுடில்லி : ‘மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் வைத்துள்ள பெரும்பான்மை பங்குகளை, தனியாருக்கு விற்பனை செய்தால், இறக்குமதி செலவை, 25 சதவீதம் குறைக்கலாம்’ என, அனில் அகர்வால் தலைமையிலான, வேதாந்தா குழுமம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இக்குழுமம், நாட்டின் முன்னணி பத்திரிகைகளில், முழு பக்க விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதன் விபரம்: இந்தியா, பணக்கார நாடாக இருந்தாலும், ஏழையாகவே உள்ளது. இந்நாடு, ஏராளமான கனிமங்கள், உலோகங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை கொண்டுள்ளது. அதன் மூலம், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை, 2 சதவீதத்தில் இருந்து, 7 சதவீதமாக உயர்த்த முடியும்.
அதற்கு, கோல் இந்தியா, இந்துஸ்தான் காப்பர், ஓ.என்.ஜி.சி., என்.எம்.டி.சி., போன்ற, பொதுத் துறை நிறுவனங்களில், தனியார் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். தனியார் நிறுவனங்களின், பெரும்பான்மை பங்குகளை வைத்துள்ள பொதுத் துறை நிறுவனங்கள், 10 மடங்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், அதே மடங்கில் உற்பத்தியை பெருக்கவும் முடியும். இதன் மூலம், இரு ஆண்டுகளில், குறைந்தபட்சம், இறக்குமதி செலவில், 25 சதவீதத்தை குறைக்க இயலும். இது, கடந்த கால நடவடிக்கைகளில் நிரூபணமாகி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|