பதிவு செய்த நாள்
19 டிச2017
23:45
புதுடில்லி : அக்மி சோலார் ஹோல்டிங்ஸ் மற்றும், எச்.ஜி., இன்ப்ரா இன்ஜினியரிங் நிறுவனங்கள், பங்கு வெளியீட்டில் களமிறங்க, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, இரு நிறுவனங்களும், விரைவில் பங்கு விற்பனையை மேற்கொள்ள உள்ளன.
இதில், மரபு சாரா எரிசக்தி துறையைச் சேர்ந்த, அக்மி நிறுவனம், 2,200 கோடி ரூபாய் திரட்டி, ராஜஸ்தானில், 200 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளது. இத்துடன், பழைய கடன்களை திரும்பத் தரவும், நிர்வாக செயல்பாடுகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டு உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை பணிகள் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வரும், எச்.ஜி., இன்ப்ரா இன்ஜினியரிங் நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 500 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளது. இந்நிறுவனம், பங்கு விற்பனையில் கிடைக்கும் தொகையை, பொறியியல் சாதனங்களை வாங்கவும், பழைய கடன்களை திரும்பத் தரவும், இதர நிர்வாக நடவடிக்கைகளுக்கும், பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|