பதிவு செய்த நாள்
19 டிச2017
23:48
புதுடில்லி : பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., ஆகியவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் மறைந்து வருவதால், வரும் புத்தாண்டில், விற்பனை சிறப்பாக இருக்கும் என, நுகர்பொருள் மற்றும் நுகர்வோர் சாதனங்கள் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள், நம்பிக்கை தெரிவித்து உள்ளன.
அதன் விபரம்: சுனில் டிசோசா, நிர்வாக இயக்குனர், வேர்ல்பூல் இந்தியா: ஜி.எஸ்.டி., அமலாக்கத்திற்கு பின், நுகர்வு சந்தை, ஸ்திரமாக, மேம்பாடு கண்டு வருவதற்கான அறிகுறிகள் தோன்றி உள்ளன. வரும் ஆண்டில், மக்களின் தேவைகள், கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும், சரிசமமான அளவில் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், நிறுவனத்தின் விற்பனையும் சிறப்பாக இருக்கும்.
ஹர்ஷ வர்தன் அகர்வால், இயக்குனர், இமாமி: சீர்திருத்த நடவடிக்கைகளின் பாதிப்பில் இருந்து, சில்லரை விற்பனையும், கிராமப்புற வர்த்தகமும் முழுவதுமாக மீண்டு, இரட்டை இலக்க வளர்ச்சி என்ற ஆரோக்கியமான பாதையில் நடைபோடத் துவங்கி உள்ளன. மொத்த விற்பனை, 80 சதவீத எழுச்சியை கண்டுள்ளது. அடுத்த ஆண்டு, நுகர்பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும்.
சதிஷ் பத்மனாபன், தலைவர், சோனி இந்தியா: நீண்ட கால வளர்ச்சியை கருதி, மத்திய அரசு சில சீர்திருத்தங்களை மேற்கொண்டது. அதனால் ஏற்பட்ட தாக்கம் மறைந்து, ஆக்கபூர்வமான சூழல் உருவாகி உள்ளது. இந்தாண்டை விட, வரும் ஆண்டு, நுகர்வோர் சாதனங்கள் துறை மேம்பட்டதாக இருக்கும். அனைத்து பிரிவுகளிலும், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், மின்னணு சாதனங்களை அறிமுகப்படுத்த உள்ளோம்.
சுனில் கட்டாரியா, இந்திய பிரிவு தலைவர், ஜி.சி.பி.எல்.: பண மதிப்பு நீக்க நடவடிக்கை, இந்திய பொருளாதாரத்தின், ‘கறுப்பு வாத்து’ ஆக வர்ணிக்கப்படுகிறது. இதனால், பல சோதனைகளை, நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் சந்திக்க வேண்டிய நிலை உண்டானது. இந்தாண்டை போன்று இல்லாமல், அடுத்த ஆண்டு, வர்த்தகச் சூழல் நன்கு இருக்கும் என, தெரிகிறது.
லலித் மாலிக், தலைமை நிதி அதிகாரி, தாபர் இந்தியா: பண மதிப்பு நீக்கமும், ஜி.எஸ்.டி., அமலாக்கமும், மொத்த விற்பனையை வெகுவாக பாதித்தன. குறிப்பாக, நுகர்பொருட்கள் வினியோகம் பாதிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி., காரணமாக, வணிகர்கள் கையிருப்பை குறைக்கும் நோக்கில், கொள்முதலை குறைத்து கொண்டனர். இதனால், இத்துறை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. தற்போது, இந்த தற்காலிக பாதிப்பு மறைந்து, வளர்ச்சியை நோக்கி பயணம் தொடர்கிறது
ராஜீவ் புடானி, துணைத் தலைவர், சாம்சங் இந்தியா: அடுத்த ஆண்டு, மின்னணு சாதனங்கள் துறையில், புதிய கண்டுபிடிப்புகளை, இந்திய நுகர்வோருக்கு முதன்முதலாக வழங்க திட்டமிட்டு உள்ளோம். இதைத் தொடர்ந்து, வியக்கத்தக்க, புதுமையான சாதனங்களை அறிமுகப்படுத்த உள்ளோம். குறிப்பாக, குளிர்சாதன பிரிவில், உலகின் முதல் கண்டுபிடிப்பை இணைத்து, 2018ம் ஆண்டை துவக்க முடிவு செய்துள்ளோம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|