பதிவு செய்த நாள்
20 டிச2017
23:49
புதுடில்லி : மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம், பல ஆண்டுகளாக, வரவு – செலவு கணக்கை சமர்ப்பிக்காத, 2.24 லட்சம் நிறுவனங்களை, நிறுவனங்கள் பதிவு பட்டியலில் இருந்து நீக்கியது.
இந்நிறுவனங்களைச் சேர்ந்த, 3.09 லட்சம் இயக்குனர்கள், தகுதியிழப்பு செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையை எதிர்த்து, பல நிறுவனங்கள், நீதிமன்றத்தை அணுகி உள்ளன.மேலும், முறையாக செயல்படும் பல நிறுவனங்களும், இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு உள்ளது, அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்தது. அதனால், 2018 ஜன., – மார்ச் வரை, பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நிறுவனங்கள், அவற்றின் ஆண்டு நிதி நிலை அறிக்கையை சமர்ப்பிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த, நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.
இத்திட்டத்தில், 30 ஆயிரம் ரூபாய் செலுத்தி, நிலுவையில் உள்ள நிதி நிலை அறிக்கைகளை, நிறுவனங்கள் அளிக்கலாம். அவை ஏற்கப்பட்டால், அந்நிறுவனங்கள் மீண்டும், நிறுவனங்கள் பதிவு பட்டியலில் சேர்க்கப்படும்; இயக்குனர்கள் மீதான தகுதி இழப்பு நடவடிக்கையும் ரத்து செய்யப்படும். இத்திட்டம் குறித்த அறிவிப்பு, இன்று அல்லது நாளை வெளியாகலாம் என, தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|