பதிவு செய்த நாள்
20 டிச2017
23:49
புதுடில்லி : ‘‘இந்தியாவில், 2025க்குள் அமைய உள்ள, 356 மொபைல் சார்ஜர் தயாரிப்பு தொழிற்சாலைகள் மூலம், 8 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர்,’’ என, ஐ.சி.ஏ., எனப்படும், இந்திய மொபைல் கூட்டமைப்பு தலைவர், பங்கஜ் மஹிந்த்ரோ தெரிவித்து உள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது: மத்திய அரசு, பேட்டரி சார்ஜர் தயாரிப்பை ஊக்குவிக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால், 356க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், மொபைல் போன் சார்ஜர் தயாரிப்பில் இறங்க உள்ளன. இதன் மூலம், ௨025க்குள் இலக்கு அளவான, 146 கோடி பேட்டரி சார்ஜர்களை தயாரிக்க முடியும் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை. இந்த மொபைல் போன் சார்ஜர் தயாரிப்பு நிறுவனங்கள் மூலம், 8 லட்சம் பேருக்கு, வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மொபைல் போன் துறையில், உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்க, மத்திய அரசு, ‘பல நிலை தயாரிப்பு’ திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம், சில வகை மொபைல் போன் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு, சுங்க வரி உயர்த்தப்பட்டு உள்ளது. இது, மொபைல் போன் நிறுவனங்கள் மற்றும் சார்ஜர் தயாரிப்பு நிறுவனங்களிடம், நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|