பதிவு செய்த நாள்
20 டிச2017
23:50
கோல்கட்டா : பொதுத் துறை வங்கிகளை விட, தனியார் துறை வங்கிகள் மீதான புகார்கள் அதிகரித்து வருவதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இவ்வங்கி வெளியிட்டுள்ள, வங்கி மத்தியஸ்த மையத்தின், கடந்த நிதியாண்டு அறிக்கை: தனியார் வங்கிகள் மீது, வாடிக்கையாளர்கள் அளித்த புகார்களின் எண்ணிக்கை, மூன்று ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. 2015 – 16ம் நிதியாண்டை விட, 2016 – 17ம் நிதியாண்டில், புகார்கள், 30 சதவீதம் அதிகரித்துள்ளன. இதே காலத்தில், எச்.டி.எப்.சி., வங்கி மீதான புகார்கள், 7,709லிருந்து, 9,884 ஆக உயர்ந்துள்ளன. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி மீது கூறப்பட்ட புகார்கள், 7,897லிருந்து, 9,541 ஆக அதிகரித்துள்ளன.
வங்கி மத்தியஸ்த மையம் கையாண்ட மொத்த புகார்கள், 27 சதவீதம் உயர்ந்து, 1.36 லட்சமாக பெருகி உள்ளது. பெரும்பாலான புகார்கள், வாடிக்கையாளர்களுக்கு உறுதி அளித்தபடி, வங்கிகள் நடந்து கொள்வதில்லை எனவும், வங்கிகளின் நியாயமற்ற செயல்பாடுகள் தொடர்பாகவும் உள்ளன. ஏ.டி.எம்., அல்லது டெபிட் கார்டு தொடர்பாக, 12.5 சதவீதம்; ஓய்வூதியம் தொடர்பாக, 6.5 சதவீத புகார்கள் வந்துள்ளன.
கிரெடிட் கார்டு தொடர்பான புகார்களின் எண்ணிக்கை, 8.5லிருந்து, 6.4 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டில், பொதுத் துறை வங்கிகள் மீதான புகார்கள், 64லிருந்து, 62 சதவீதமாக சரிவடைந்து உள்ளது. இதில், எஸ்.பி.ஐ., குழும வங்கிகள் மீது மட்டும், 27 சதவீத புகார்கள் வந்துள்ளன. தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் மீது, முறையே, 26.5 சதவீதம் மற்றும், 2.5 சதவீதம் என்ற அளவில் புகார்கள் குவிந்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேல்முறையீடு:
தற்போது, 34 வங்கிகளில், தனி மத்தியஸ்த மையங்கள் உள்ளன. அவற்றில் தீர்வு கிடைக்காதோர், வங்கி மத்தியஸ்த மையத்தை அணுகி முறையிடலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|