பதிவு செய்த நாள்
22 டிச2017
02:46
புதுடில்லி : ‘வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி வழங்கும், குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதம், அடுத்த ஆண்டும் மாற வாய்ப்பில்லை’ என, ‘நோமுரா’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் விபரம்: அக்டோபர் மற்றும் டிசம்பரில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட நிதிக் கொள்கையில், ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை. தற்போது, 6 சதவீதமாகவே தொடருகிறது. வரும் ஆண்டிலும், இந்த வட்டி விகிதம் தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்க உயர்வு, விலைவாசி அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலையேற்றம் ஆகியவற்றால், ரெப்போ வட்டியை, ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்பில்லை. மேலும், நாட்டின் பொருளாதார மந்த நிலை மறைந்து, வளர்ச்சி அறிகுறிகள் தோன்றியுள்ள நிலையில், வட்டி விகிதத்தை குறைக்க, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு விரும்பாது. அதனால், 2018 பிப்., 7ல், வெளியாகும் நிதிக் கொள்கை அறிவிப்பில், வட்டி குறைய வாய்ப்பு இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|