பதிவு செய்த நாள்
22 டிச2017
02:48
புதுடில்லி : ஜவுளித் துறையில், 1,300 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், புதிய திறன் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த, மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், அமைப்பு சார்ந்த ஜவுளித் துறை மற்றும் அதன் துணை பிரிவுகளில், அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இது குறித்து, மத்திய ஜவுளி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: பின்னலாடை, நெசவு ஆகியவை நீங்கலாக, அமைப்பு சார்ந்த ஜவுளித் துறையின் அனைத்து பிரிவுகளும், புதிய திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தில் பயன்பெறும். இதில், ஜவுளி பிரிவுகளில், 10 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளித்து, சான்றிதழ் வழங்கப்படும். அதில், 1 லட்சம் பேர், பாரம்பரிய ஜவுளி பிரிவுகளில் பயிற்சி பெறுவர்.
திறன் பயிற்சி முடிந்து, சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களில், 70 சதவீதம் பேருக்கு, வேலைவாய்ப்பு வழங்கப்படும். தேவை அதிகமுள்ள பிரிவுகளில், திறன் பயிற்சியும், பாரம்பரிய பிரிவுகளில் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான பயிற்சியும் வழங்கப்படும்.குறிப்பாக, துவக்க நிலை பணிகள், மேற்பார்வை, நிர்வகித்தல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படும்.
இதற்காக, ஜவுளி ஆலைகள், தொழில்நுட்ப மையங்கள் ஆகியவற்றுடன், பயிற்சியுடன், பணி அமர்த்துவதற்கும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும். கைத்தறி, கைவினைப் பொருட்கள், சணல், பட்டு உள்ளிட்ட பாரம்பரிய பிரிவுகளுக்கு, சிறப்பு திட்டத்தில் பயிற்சி அளிக்கப்படும். திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்தவர்கள், தொழில் துவங்க, ‘முத்ரா’ திட்டத்தில் கடன் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
70 சதவீதம்:
ஜவுளித் துறையில், ஆயத்த ஆடைகள் பிரிவில், பெண்களின் பங்களிப்பு பெரும்பான்மையாக உள்ளது. கடந்த, 12வது திறன் மேம்பாட்டு திட்டத்தில், பயிற்சி பெற்ற, 10 லட்சம் பேரில், 70 சதவீதம் பேர் பெண்கள்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|