‘ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்டம்: 5,350 நிறுவனங்களுக்கு சலுகை‘ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்டம்: 5,350 நிறுவனங்களுக்கு சலுகை ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.08 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.08 ...
நடப்பு 2017ம் ஆண்டில்... 153 புதிய பங்கு வெளியீடுகளில் ரூ.75,400 கோடி திரட்டி சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2017
02:50

புதுடில்லி : இந்­திய பங்­குச் சந்­தை­களில், இந்­தாண்டு, 153 புதிய பங்கு வெளி­யீ­டு­கள் மூலம், 75,400 கோடி ரூபாய் திரட்­டப்­பட்டுள்­ளது, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.

பிரிட்­ட­னைச் சேர்ந்த, ‘எர்­னஸ்ட் யங்’ நிறு­வ­னம், சர்­வ­தேச அள­வில், நடப்­பாண்டு மேற்­கொள்­ளப்­பட்ட, புதிய பங்கு வெளி­யீ­டு­கள் குறித்து வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை: உல­க­ள­வில், இந்­தாண்டு புதிய பங்கு வெளி­யீ­டு­க­ளுக்கு, வர­வேற்பு காணப்­பட்­டது. இதில், இந்­தியா, மத்­திய கிழக்கு மற்­றும் ஆப்­ரிக்க பிராந்­தி­யத்தை உள்­ள­டக்­கிய, இ.எம்.இ.ஐ.ஏ., நாடு­களில், இந்­திய பங்­குச் சந்­தை­கள், புதிய பங்கு வெளி­யீ­டு­களில், அதிக நிதி திரட்டி சாதனை படைத்­துள்ளன.

நம்பிக்கை :
மும்பை பங்­குச் சந்­தை­யான, பி.எஸ்.இ., சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கான, எஸ்.எம்.இ., பங்­குச் சந்தை ஆகி­யவை, 17 புதிய பங்கு வெளி­யீ­டு­கள் மூலம், சாதனை அள­வாக, 550 கோடி டாலர் திரட்டி உள்ளன. இது, ரூபாய் மதிப்­பில், 35,750 கோடி­யா­கும். இதில், மிக அதிக தொகையை திரட்­டிய நிறு­வ­னம் எனும் சிறப்பை, ஜென­ரல் இன்­சூ­ரன்ஸ் கார்ப்­ப­ரே­ஷன் ஆப் இந்­தியா பெற்­றுள்­ளது. இந்­நி­று­வ­னம், புதிய பங்கு வெளி­யீடு வாயி­லாக, 11,050 கோடி ரூபாய் திரட்டி உள்­ளது.

இந்­தி­யா­வில், அர­சி­யல் சூழல் ஸ்தி­ர­மாக உள்­ளது. மத்­திய அரசு, சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­களை தொடர்ந்து மேற்­கொண்டு வரு­வது, முத­லீட்­டா­ளர்­க­ளி­டம் நம்­பிக்­கையை விதைத்­துள்­ளது. இத­னால், புதிய பங்கு வெளி­யீ­டு­கள் வர­வேற்பை பெற்று வரு­கின்றன. இந்­தாண்டு, சாதனை அள­வாக, புதிய பங்கு வெளி­யீ­டு­களும், அவற்­றின் மூலம் திரட்­டிய தொகை­யும், நாட்­டின் பொரு­ளா­தார வலி­மையை பறை­சாற்­று­கின்றன. அத்­து­டன், முத­லீட்­டா­ளர்­கள் இடையே, பங்கு முத­லீ­டு­களில் அதி­க­ரித்து வரும் ஆர்­வத்­தை­யும் எடுத்­துக் காட்­டு­கின்றன.

மூலதன சந்தை:
இந்­நி­லை­யில், அமெ­ரிக்க அரசு மேற்­கொள்ள உள்ள வரி சீர்­தி­ருத்­தங்­களின் எதி­ரொ­லி­யாக, இந்­திய மூல­த­னச் சந்தை, மேலும் வலு­வான வளர்ச்சி காணும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. மூல­த­னச் சந்­தை­யின் எழுச்­சி­யும், நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சி­யும், வரும் மாதங்­களில், வள­ரும் நாடு­களின் பங்கு முத­லீ­டு­களில், இந்­தி­யாவை முன்­னி­லைப்­ப­டுத்­தும். இந்­தாண்டு, வள­ரும் நாடு­களின் புதிய பங்கு வெளி­யீ­டு­களில், இந்­தி­யா­வின் மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்­தை­கள், 74 சத­வீத வளர்ச்­சியை கண்­டுள்ளன.

இ.எம்.இ.ஐ.ஏ., நாடு­களில், அதி­கம் புதிய பங்கு வெளி­யீ­டு­களை மேற்­கொண்­ட­தில், தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள் முத­லி­டம் பிடித்­துள்ளன. அடுத்து, தொழில் மற்­றும் நிதித் துறை நிறு­வ­னங்­கள் உள்ளன. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

வாய்ப்பு:
இந்­தி­யா­வின் புதிய பங்கு வெளி­யீட்டு சந்தை, 2018ல் நன்கு இருக்­கும். தற்­போ­துள்ள பங்­கு­களின் மதிப்பு, ஏற்­க­னவே முத­லீடு செய்து உள்­ளோ­ருக்கு, மேலும் முத­லீடு செய்­யும் வாய்ப்பை வழங்­கும் வகை­யில் உள்­ளது. எனி­னும், பங்­குச் சந்­தை­யில் காளை­யின் ஆதிக்­கம் நீடிப்­பது, பழைய மற்­றும் புதிய பங்கு விற்­ப­னை­யின் சரி­ச­ம­மான வளர்ச்­சியை பொறுத்­துள்­ளது.
-விஷ் திங்ரா, பங்குதாரர், ‘எர்னஸ்ட் யங் இந்தியா’

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)