பதிவு செய்த நாள்
22 டிச2017
16:03
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு விசாரணையின் போது சம்பந்தப்பட்ட டெலிகாம் நிறுவனங்களின் உரிமங்களை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த நிறுவனங்கள் இந்தியாவின் 22 வட்டாரங்களில் மொபைல்போன் சேவைகளை தொடங்க அனுமதி பெற்று இருந்தன. இதற்காக ரூ.1,658 கோடியை மத்திய தகவல் தொடர்புத்துறைக்கு வழங்கின. உரிமம் ரத்து செய்யப்பட்டதால் டெலிபோன் நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்தன.
இந்நிலையில் நேற்று 2ஜி வழக்கில் சி.பி.ஐ. தரப்பில் குற்றச்சாட்டு நிரூபிக்கப் படவில்லை என்று தீர்ப்பு கூறியதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட டெலிகாம் நிறுவனங்கள் மத்திய அரசிடம் இழப்பீடு கேட்க முடிவு செய்துள்ளன. 2ஜி வழக்கு விசாரணைக்காக டெலிகாம் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் நேற்று தீர்ப்பை கேட்க கோர்ட்டுக்கு வந்து இருந்தனர்.
அப்போது லூப் டெலிகாம் நிறுவனத்தின் வக்கீல்கள் கூறும் போது, “உரிமம் ரத்து செய்யப்பட்டதால் எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 22 வட்டாரங்களுக்கும் ரூ.1,658 கோடி செலுத்தி இருந்தோம். பாதியில் உரிமம் ரத்து செய்யப்பட்டதால் ரூ.1,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே ரூ.1,000 கோடி இழப்பீடு கேட்டு டெலிபோன் விவகாரங்களுக்கான தீர்ப்பாயத்தில் வழக்கு தொடருவோம், இல்லையெனில் சர்வதேச நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடருவோம் என்று தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|