தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைவு ... ஜனவரி 31-ம் தேதியுடன் ஏர்செல் சேவை நிறுத்தம்: டிராய் அதிரடி அறிவிப்பு ஜனவரி 31-ம் தேதியுடன் ஏர்செல் சேவை நிறுத்தம்: டிராய் அதிரடி அறிவிப்பு ...
2ஜி உரிமம் ரத்து: ரூ.1,000 கோடி இழப்பீடு கேட்க டெலிகாம் நிறுவனங்கள் முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2017
16:03

புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு விசாரணையின் போது சம்பந்தப்பட்ட டெலிகாம் நிறுவனங்களின் உரிமங்களை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த நிறுவனங்கள் இந்தியாவின் 22 வட்டாரங்களில் மொபைல்போன் சேவைகளை தொடங்க அனுமதி பெற்று இருந்தன. இதற்காக ரூ.1,658 கோடியை மத்திய தகவல் தொடர்புத்துறைக்கு வழங்கின. உரிமம் ரத்து செய்யப்பட்டதால் டெலிபோன் நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்தன.

இந்நிலையில் நேற்று 2ஜி வழக்கில் சி.பி.ஐ. தரப்பில் குற்றச்சாட்டு நிரூபிக்கப் படவில்லை என்று தீர்ப்பு கூறியதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட டெலிகாம் நிறுவனங்கள் மத்திய அரசிடம் இழப்பீடு கேட்க முடிவு செய்துள்ளன. 2ஜி வழக்கு விசாரணைக்காக டெலிகாம் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் நேற்று தீர்ப்பை கேட்க கோர்ட்டுக்கு வந்து இருந்தனர்.

அப்போது லூப் டெலிகாம் நிறுவனத்தின் வக்கீல்கள் கூறும் போது, “உரிமம் ரத்து செய்யப்பட்டதால் எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 22 வட்டாரங்களுக்கும் ரூ.1,658 கோடி செலுத்தி இருந்தோம். பாதியில் உரிமம் ரத்து செய்யப்பட்டதால் ரூ.1,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே ரூ.1,000 கோடி இழப்பீடு கேட்டு டெலிபோன் விவகாரங்களுக்கான தீர்ப்பாயத்தில் வழக்கு தொடருவோம், இல்லையெனில் சர்வதேச நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடருவோம் என்று தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)