பதிவு செய்த நாள்
22 டிச2017
16:28
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்டன. பிற்பகல் வர்த்தகத்தின் போது, ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் அடைந்ததாலும், எண்ணெய், தொழில்நுட்பம், வங்கி மற்றும் நிதித்துறை பங்குகள் வெகுவாக உயர்ந்ததன் காரணமாக நிப்டி அதிரடியாக உயர்ந்து.
இதனால் வர்த்தக நேர முடிவில் 10,500 புள்ளிகளை நிப்டி எட்டிப்பிடித்து, பங்குச்சந்தை வரலாற்றில் மீண்டும் ஒரு புதிய மைல்கல்லை அடைந்துள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு முன் வார இறுதி வர்த்தக நாளின் முடிவில் நிப்டியின் அதிரடி உயர்வு முதலீட்டாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 184.02 புள்ளிகள் .யர்ந்து 33,940.30 புள்ளிகளாகவும், நிப்டி 52.70 புள்ளிகள் உயர்ந்து 10,493 புள்ளிகளாகவும் உள்ளன. வரும் வாரங்களிலும் பங்குச்சந்தையில் இந்த உயர்வு தொடர வாய்ப்பு உள்ளதாக சந்தை நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|