பதிவு செய்த நாள்
23 டிச2017
03:39
ஐதராபாத் : ‘ஜி.எஸ்.டி.,யில், பெட்ரோல், டீசலை கொண்டு வர மாநிலங்கள் விரும்பாது என்பதால், அத்திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை’ என, ‘அசோசெம்’ செகரட்டரி ஜெனரல் டி.எஸ்.ராவத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, ‘ஜி.எஸ்.டி.,யில், பெட்ரோல், டீசலை கொண்டு வர, மத்திய அரசு தயார். அதற்கு முன், மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும்’ என்றார்.
இது குறித்து, ராவத் கூறியதாவது: மாநிலங்களுடன், மத்திய அரசுக்கும் பெட்ரோல், டீசல் வரியில் தான் பெரும் வருவாய் கிடைக்கிறது. அதனால், மத்திய அரசும், இத்திட்டத்தை கொண்டு வர விரும்பாது. தற்போது, பெட்ரோல், டீசல் மீது, மத்திய, மாநில அரசுகள், 100 – 103 சதவீதம் வரி விதிக்கின்றன. ஆனால், ஜி.எஸ்.டி.,யில், அதிகபட்சம், 28 சதவீத வரி தான் உள்ளது.
இத்துடன், கூடுதல் வரி சேர்த்தாலும், 50 சதவீதம் மட்டுமே வசூலிக்க முடியும். இதனால், 50 சதவீத வருவாய் இழப்பு ஏற்படுவதை, மத்திய, மாநில அரசுகள் விரும்புமா? இந்த இழப்பிற்கு ஈடாக, வேறு வருவாய் ஈட்டும் திட்டம் தான் உள்ளதா? ஜி.எஸ்.டி.,யில் பெட்ரோல், டீசல் வந்தால், அது, நுகர்வோருக்கு பயன் உள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|