பதிவு செய்த நாள்
26 டிச2017
00:31
ஜெய்ப்பூர் : ‘‘சர்வதேச நாடுகளின் பொருளாதாரம் நிலையாக வளர்ச்சி காண, உலகம் முழுமைக்குமான வர்த்தகத்திற்கு, ஒரே பொதுவான கரன்சியை பயன்படுத்த வேண்டும்,’’ என, பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் பின்னணியில் இருந்ததாக கூறப்படும், அர்த்தாகிரந்தி அமைப்பின் தலைவர், அனில் போகில் யோசனை தெரிவித்து உள்ளார்.
அவர் மேலும் பேசியதாவது: பண மதிப்பு நீக்கத்தின் சாதகமான பலன்கள், வரும் காலங்களில் தெரிய வரும். லஞ்ச ஊழல், கறுப்புப் பணம், பயங்கரவாத நிதியுதவி போன்றவற்றை ஒழிக்க, பண மதிப்பு நீக்க நடவடிக்கை மிகவும் அவசியமாகும். இதனால், கள்ள நோட்டு புழக்கம் குறையும். ஜி.எஸ்.டி., பொருளாதார வளர்ச்சியை நோக்கிய முதல் சீர்திருத்த நடவடிக்கையாகும்.
பருவ மாற்றம், பயங்கரவாதம், வறுமை போன்ற சர்வதேச பிரச்னைகளுக்கு தீர்வு காண, சர்வதேச வரி விதிப்பு முறையை அமல்படுத்தலாம். ஐ.நா.,விற்கு, 80 சதவீத நிதியுதவியை, அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் வழங்குவதால், அந்நாடுகளுக்கு சாதகமாக, ஐ.நா., செயல்படுகிறது; இதர நாடுகளின் நலன் பற்றி பேசாது. அதனால், சர்வதேச வரி மூலம், வளரும் நாடுகள், பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|