பதிவு செய்த நாள்
26 டிச2017
23:41
கோல்கட்டா : இந்தியாவில், இணையம் மூலம், சாதனங்கள் இடையிலான செயல்பாடுகளை மேற்கொள்வது அதிகரித்து வருகிறது.
இது, ‘இன்டர்நெட் ஆப் திங்ஸ்’ தொழில்நுட்பம் எனப்படுகிறது. இதன் மூலம், வீடுகளில் உள்ள, பிரிட்ஜ், வாஷிங் மிஷின், ‘டிவி’ உள்ளிட்ட சாதனங்களை, எங்கிருந்தும் இயக்கலாம். அவற்றுக்கு இடையிலான தன்னிச்சையான செயல்பாட்டிற்கும், இந்த தொழில்நுட்பம் உதவுகிறது. அதிகரித்து வரும் இத்தகைய தொழில்நுட்ப சாதனங்களின் பாதுகாப்பிற்கு, தேவையான சாப்ட்வேர்களை உருவாக்குவதில், பல நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்கின்றன.
இது குறித்து, டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின், மூத்த துணைத் தலைவர், சி.ஆர்.சீனிவாசன் கூறியதாவது: அறிவுசார் தொழில்நுட்பத்தில் செயல்படும் சாதனங்களில், வாடிக்கையாளரின் தரவுகள் திருடு போகாமல் பாதுகாக்க வேண்டும்.கணினி நாசகாரர்களால், தரவுகள் திருடப்பட்டால் அது, நுகர்வோரை பாதிப்பது மட்டுமின்றி, தயாரிப்பு நிறுவனங்களின் பொறுப்பையும் கேள்விக்குறியாக்கும். வரும் ஆண்டில், இத்தகைய, ‘சைபர்’ தாக்குதல்கள் அதிகரிக்கும் என்பதால், முன்னெச்சரிக்கையாக, அத்தகைய தாக்குதல்களை தடுக்கும் பாதுகாப்பு அம்சங்களுக்கு, நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்கும், இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|