பதிவு செய்த நாள்
26 டிச2017
23:42
மும்பை : கடந்த, 2016 – 17ம் நிதியாண்டில், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், நாடு முழுவதும் குடும்பங்களின், ‘டிபாசிட்’ வளர்ச்சி அதிகரித்துள்ளது. எனினும் இதில், தென்னிந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
‘கடந்த நிதியாண்டில், டிபாசிட் வளர்ச்சி, 14.1 சதவீதமாக உயர்ந்துள்ளது; இது, முந்தைய நிதியாண்டில், 12.3 சதவீதமாக இருந்தது’ என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதே காலத்தில், தென்னிந்தியாவில், குடும்பங்களின் டிபாசிட் வளர்ச்சி, 13.8 சதவீதத்தில் இருந்து, 13.3 சதவீதமாக குறைந்து உள்ளது.
அதே சமயம், வடக்கு, மேற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில், டிபாசிட் வளர்ச்சி அதிகரித்து உள்ளது. தமிழகத்தில், குடும்பங்களின் டிபாசிட் வளர்ச்சி, 16.7லிருந்து, 12.2 சதவீதமாக சரிவடைந்து உள்ளது. இது, கர்நாடகாவில், 13.5லிருந்து, 11.5 சதவீதம்; தெலுங்கானாவில், 23.7லிருந்து, 16.4 சதவீதம் என்ற அளவில் வீழ்ச்சி கண்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|