பதிவு செய்த நாள்
26 டிச2017
23:44
புதுடில்லி : வலைதளம் மூலம், ‘ஆர்டர்’ செய்து பெறும் உணவு வகைகளில், சிக்கன் பிரியாணி முதலிடத்தை பிடித்துள்ளது.
இது குறித்து, வலைதள உணவு சேவை நிறுவனமான, ‘ஸ்விக்கி’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: ஓராண்டில், சென்னை, கோல்கட்டா, ஐதராபாத், மும்பை, டில்லி – தலைநகர் பிராந்தியம், புனே ஆகிய நகரங்களில், வலைதளங்கள் மூலம் மக்கள் வாங்கிய உணவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் முதலிடத்தை, சிக்கன் பிரியாணி பிடித்துள்ளது. அடுத்த நான்கு இடங்களை, மசால் தோசை, பட்டர் நான், தந்துாரி ரொட்டி, பன்னீர் பட்டர் மசாலா ஆகியவை பிடித்துள்ளன.
வலைதளங்களில் அதிகமான தேடப்பட்ட உணவு, பீட்சா. ஐந்து லட்சத்திற்கும் அதிகமான முறை, இந்த உணவு குறித்த விபரங்கள் தேடப்பட்டு உள்ளன. எனினும், வாங்கப்பட்ட உணவில், சிக்கன் பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது. சென்னையில், பொங்கல், பிரியாணிக்கு அமோக வரவேற்பு உள்ளது. மும்பையில், பாவ் பஜ்ஜி; டில்லி மற்றும் கூர்கானில், தால் மக்கானி, நான்; டில்லியில், பாஸ்தா; புனேவில், தால் கிச்சடி ஆகியவை, மக்களின் விருப்பத் தேர்வாக உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|