பதிவு செய்த நாள்
26 டிச2017
23:45
புதுடில்லி : இந்தியாவின் வர்த்தகச் சூழல் குறித்து, தொழிலதிபர்கள் பெரிதும் நம்பிக்கை கொண்டிருப்பது, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, ‘கிரான்ட் தார்ன்டன்’ நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், மிகப்பெரிய பொருளாதார நாடுகளான, சீனா, ஜப்பான் ஆகியவற்றின் வர்த்தகம் மேம்பட்டு உள்ளது. இதன் காரணமாக, இப்பிராந்தியத்தின் வர்த்தகச் சூழல் மீதான, தொழில் நிறுவனங்களின் நம்பிக்கை, இரு ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. இப்பிராந்தியத்தில், இந்தியாவின் வர்த்தகச் சூழல் குறித்து, ஆய்வில் பங்கேற்ற, பெரும்பாலான தொழிலதிபர்கள் சாதகமான கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். அதே சமயம், அவர்களின் நம்பிக்கை அடிப்படையிலான குறியீட்டு அளவு, நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்துள்ளது. இதற்கு, பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., புதிய திவால் சட்டம் ஆகியவற்றின் தாக்கம் காரணம் எனலாம்.
அதே சமயம், எந்த நாடும் பெற்றிராத வகையில், உலக வங்கியின், ‘சுலபமாக தொழில் புரியும் நாடுகள்’ பட்டியலில், இந்தியா வேகமாக முன்னேறி உள்ளது. பரவலாகி வரும் பொருளாதார வலிமையால், உலகளவில் சிறப்பான வளர்ச்சி கண்டு வரும் ஒருசில நாடுகளில் ஒன்றாக, இந்தியா தொடர்ந்து இருக்கிறது. நடுத்தர மக்களின் செலவழிப்பு வருவாய் பெருகி வருவதால், இந்தியாவில் நுகர்வு அதிகரித்துள்ளது. அதனால், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், அதிகளவில் சாதகமான வர்த்தக வாய்ப்புகளை கொண்ட நாடாக, இந்தியா உள்ளது.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், வர்த்தகச் சூழல் குறித்து, ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து தொழில் நிறுவனங்களின் நம்பிக்கை, தலா, 75 சதவீதத்தில் இருந்து, முறையே, 58 மற்றும் 68 சதவீதமாக குறைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|