பதிவு செய்த நாள்
28 டிச2017
10:17
மும்பை : டிசம்பர் மாதம் மற்றும் 2017 ம் ஆண்டின் இறுதி வர்த்தக வாரம் என்பதால் புதிய ஒப்பந்தங்கள், முதலீடுகள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கிய போதிலும், சர்வதேச சந்தையில் ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுகிறது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (டிச.,28., காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 51.96 புள்ளிகள் உயர்ந்து 33,963.77 புள்ளிகளாகவும், நிப்டி 21 புள்ளிகள் உயர்ந்த 10,511.80 புள்ளிகளாகவும் இருந்தன. ஹிண்டல்கோ இண்டஸ்ட்ரீஸ், பிபிசிஎல், டாடா ஸ்டீல், கோல் இந்தியா உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.
அதே சமயம், ஸ்டார் சிமெண்ட், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|