பதிவு செய்த நாள்
29 டிச2017
23:54
புதுடில்லி : ‘‘கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக் கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை,’’ என, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா, லோக்சபாவில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: கடந்த, செப்டம்பர் நிலவரப்படி, பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன், 7.34 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதில், 12 நிறுவனங்களின் பங்கு, 25 சதவீதமாக உள்ளது. வாராக் கடனை வசூலிக்க முடியாவிட்டால், திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, வங்கிகளை, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, நவம்பர் நிலவரப்படி, தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தில், 2,434 புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பல்வேறு ஐகோர்ட்களில் இருந்த, 2,304 நிறுவனங்களை மூடுவது தொடர்பான வழக்குகளும், தீர்ப்பாயத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இதில், 2,750 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. நவம்பர் நிலவரப்படி, 1,988 வழக்குகள், நிலுவையில் உள்ளன. எந்த நிறுவனத்தின் வாராக் கடனையும் தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும், மத்திய அரசுக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|