பதிவு செய்த நாள்
29 டிச2017
23:55
புதுடில்லி : நடப்பு நிதியாண்டில், ஜி.எஸ்.டி., தாக்கம், வெளிநாட்டு, ‘ஆர்டர்’ குறைவு போன்றவற்றால், ஜவுளி துறை ஏற்றுமதி இலக்கான, 4,500 கோடி டாலரை எட்டுவது கடினம் என, இத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் கூறியதாவது: ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி வளர்ச்சி, கடந்த நான்கு நிதியாண்டுகளாக தேக்க நிலையிலேயே உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு, சீனா போன்ற முக்கிய சந்தைகளில், தேவை குறைந்துள்ளது. இதற்கு, வியட்னாம், வங்கதேசம் போன்ற நாடுகளின் போட்டியும் காரணமாகும். இந்நிலையில், ஜி.எஸ்.டி., அறிமுகத்தால், ஏற்றுமதியாளர்கள், செலுத்திய வரியை திரும்பப் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம், நடைமுறை மூலதன முடக்கத்திற்கு வித்திட்டுள்ளது.
பழைய வரி விதிப்பில், ஏற்றுமதியாளர்கள், 7.5 சதவீத வரியை திரும்பப் பெற்றனர். இதை, மீண்டும் அமல்படுத்த வேண்டும். மின் விசைத்தறிகள் மற்றும் கைத்தறி நெசவாளர்கள் முன்னேற்றத்திற்கு, பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்றுமதி வளர்ச்சிக்கு, புதிய தேசிய ஜவுளி கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|