பதிவு செய்த நாள்
29 டிச2017
23:57
புதுடில்லி : கடன் நெருக்கடியில் இருந்து, அனில் அம்பானியை காப்பாற்றிய, சகோதரர் முகேஷ் அம்பானிக்கு, தொலைதொடர்பு சேவை துறை பாராட்டு தெரிவித்துள்ளது.
அனில் அம்பானியின், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், 45 ஆயிரம் கோடி ரூபாய் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிறுவனத்திற்கு அளித்த, ‘கெடு’ இந்தாண்டுடன் முடிவடைய உள்ளதை அடுத்து, கடன் கொடுத்த வங்கிகள், நிதி நிறுவனங்கள், திவால் நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம், ரிலையன்ஸ் நிறுவனர், மறைந்த, அனில் திருபாய் அம்பானியின் 85வது பிறந்த நாள் விழாவில், ரிலையன்ஸ் கம்யூ., சொத்துக்களை, 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, கையகப்படுத்த உள்ளதாக, முகேஷ் அம்பானி தெரிவித்தார். இந்த திட்டம் மூலம், அனில் அம்பானி, பெரும் கடன் சுமையில் இருந்தும், கடன் மீட்பு நடவடிக்கைகளில் இருந்து மீண்டுள்ளார்.
இது குறித்து, இந்திய மொபைல்போன் சேவை நிறுவனங்கள் கூட்டமைப்பான, சி.ஓ.ஏ.ஐ., டைரக்டர் ஜெனரல் ராஜன் மாத்யூஸ் கூறியதாவது: இந்த இணைப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது. சிறப்பான செயல்பாடு, வலிமையான நிதிவளம் உள்ள நிறுவனங்கள் மட்டுமே, தொலை தொடர்பு வாடிக்கையாளர்களுக்கு சிறந்த, தரமான சேவையை வழங்க முடியும். ரிலையன்ஸ் கம்யூ., சொத்துக்கள், ஆர்ஜியோ போன்ற நிறுவனம் வசம் வருவது நல்ல செய்தியாகும். இதன் மூலம், கிராமப்புறங்களில் தொலைதொடர்பு வசதி பரவலாகும். இவ்வாறு அவர் கூறினார்.
கைமாறும் சொத்து:
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின், 122.4 மெகாஹெர்ட்ஸ், ‘4ஜி’ அகண்ட அலைவரிசை, 43,000 தொலைதொடர்பு கோபுரங்கள், 1.78 லட்சம் கி.மீ., கண்ணாடி நாரிழை கம்பிவட ஒருங்கிணைப்பு வசதி, 248 ஊடக சேவை ஒருங்கிணைப்பு முனையங்கள் உள்ளிட்ட சொத்துக்கள், இனி, ‘ஆர்ஜியோ’ வசம் வரும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|