பதிவு செய்த நாள்
02 ஜன2018
00:50
கோல்கட்டா:மேற்கு வங்க தலைநகர், கோல்கட்டாவைச் சேர்ந்த, பந்தன் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், 2001ல், நுண்கடன் சேவையில் களமிறங்கியது. குறுகிய காலத்தில், நாடு முழுவதும் இதன் வர்த்தகம் விரிவடைந்து, மிகப்பெரிய நுண்கடன் நிறுவனமாக உயர்ந்தது.இதையடுத்து, ரிசர்வ் வங்கி அனுமதியுடன், 2014ல், பந்தன் வங்கி என்ற பெயரில், வங்கி சேவையை துவக்கியது.இவ்வங்கி, 2018 – 19ம் நிதியாண்டில், புதிய பங்கு வெளியீட்டில் இறங்க உள்ளது. இதற்கான தன் விபர ஆவணங்களை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் வழங்கி உள்ளது.
இப்பங்கு வெளியீட்டில், ஒரு பங்கின் முகமதிப்பு, 10 ரூபாய் என்ற வகையில், 11.9 கோடி பங்குகளை விற்பனை செய்ய, இவ்வங்கி திட்டமிட்டு உள்ளது.இப்பங்கின் பிரீமியம் விலை, ஊழியர்களுக்கான சலுகை உள்ளிட்ட விபரங்கள், பங்கு வெளியீட்டு தேதி அறிவிப்புக்கு முன் இறுதி செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|