பதிவு செய்த நாள்
02 ஜன2018
00:55
புதுடில்லி:ஏற்றுமதியை உயர்த்துவது குறித்து, மத்திய, மாநில அரசுகளின் ஆலோசனை கூட்டம், டில்லியில் நடைபெற உள்ளது.
இது குறித்து, மத்திய வர்த்தகத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு தலைமையில், வர்த்தக மேம்பாடு மற்றும் வளர்ச்சி குழுவின் கூட்டம், டில்லியில், 8ம் தேதி நடைபெற உள்ளது.இதில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வர்த்தக அமைச்சர்கள், மத்திய அரசின் வர்த்தகம், வருவாய், கப்பல் விமானம், வேளாண், பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்ட, 14 துறைகளின் செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இக்கூட்டத்தில், இந்தியாவின் ஏற்றுமதியை மேம்படுத்த, மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும்.கடந்த ஆண்டு, ஜனவரியில் நடைபெற்ற கூட்டத்தில், சர்வதேச சந்தையில் நிலவும் போட்டியை சமாளித்து, ஏற்றுமதிக்கு, ஆரோக்கிய சூழலை ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.அத்துடன், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் தரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.இந்தாண்டு, ஜி.எஸ்.டி.,யால் ஏற்றுமதி துறைக்கு ஏற்பட்டுள்ள, சாதக, பாதக அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என, தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவர், கணேஷ் குமார் குப்தா கூறுகையில், ‘‘ஆலோசனை கூட்டத்தில், மாநிலங்களில், ஏற்றுமதி சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், வரி, ‘ரீபண்டு’ சிரமங்கள் குறித்தும் விவாதிக்கப்படும்,’’ என்றார்.
சூடுபிடிக்கிறது
ஏற்றுமதி, 2017 ஏப்., – நவ., வரை, 12.01 சதவீதம் அதிகரித்து, 19,648 கோடி டாலராக உயர்ந்துள்ளது. நவம்பரில், 30.55 சதவீதம் உயர்ந்து, 2,619 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|