பதிவு செய்த நாள்
03 ஜன2018
00:19
புதுடில்லி:‘ரிசர்வ் வங்கியின் சேமிப்பு பத்திர திட்டம் கைவிடப்படவில்லை’ என, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.சில்லரை முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில், 2003ல், ரிசர்வ் வங்கி சேமிப்பு பத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. 6 ஆண்டு முதிர்வு காலம் கொண்ட இந்த பத்திரங்கள் மீதான முதலீட்டிற்கு, 8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
தேசிய சேமிப்பு திட்டம், வங்கி வைப்பு நிதி போன்றவற்றின் முதலீடுகள் மீதான வட்டி குறைக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கி சேமிப்பு பத்திரத்தில், முதலீட்டிற்கு அதிக வருவாய் கிடைக்கிறது.இந்நிலையில், இந்த சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்வது, 2ம் தேதியுடன் நிறுத்தப்படுவதாக, அரசாணை வெளியானது. இதனால், குறிப்பாக இந்த பத்திரங்களில் முதலீடு செய்து வந்த மூத்த குடிமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர், எஸ்.சி.கார்க், ‘டுவிட்டரில்’ வெளியிட்டுள்ள செய்தியில்...‘ரிசர்வ் வங்கியின், சேமிப்பு பத்திர திட்டம் கைவிடப்படவில்லை. 8 சதவீதத்திற்கு பதில், 7.5 சதவீத வட்டியுடன், இத்திட்டம் தொடர்ந்து செயல்படும்’ என, கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|