பதிவு செய்த நாள்
03 ஜன2018
00:21
புதுடில்லி:கடந்த ஆண்டு டிசம்பரில், உருக்கு, சிமென்ட் உள்ளிட்ட, முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி, 6.8 சதவீதம் வளர்ச்சி கண்டுஉள்ளது.
இது குறித்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த, 2017 நவம்பரில், கச்சா எண்ணெய், நிலக்கரி உள்ளிட்ட, எட்டு முக்கிய துறைகளின் உற்பத்தி, 6.8 சதவீதமாக வளர்ச்சி கண்டு உள்ளது. இது, 2016 நவம்பரில், 3.2 சதவீதமாக இருந்தது. 2016 அக்டோபரில், 7.1 சதவீத வளர்ச்சிக்கு பின், 2017 நவம்பரில் தான், முக்கிய துறைகள் இந்த அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளன.பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், உருக்கு, சிமென்ட் ஆகிய துறைகளின் உற்பத்தி, முறையே, 8.2 சதவீதம், 16.6 சதவீதம் மற்றும் 17.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன.
கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. நிலக்கரி உற்பத்தியில், பின்னடைவு ஏற்பட்டுள்ளது.நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டில், ஏப்., – நவ., வரை, முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 3.9 சதவீதமாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், 5.3 சதவீதமாக இருந்தது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கச்சா எண்ணெய், நிலக்கரி, இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், உரங்கள், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை, முக்கிய எட்டு துறைகளாக குறிப்பிடப்படுகின்றன.
சூப்பர்
முக்கிய எட்டு துறைகள், குறிப்பிடத்தக்க வகையில், 6.8 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளன. உருக்கு, சிமென்ட் துறைகளின் உற்பத்தி வளர்ச்சியும், பணவீக்க நடவடிக்கைக்கு முந்தைய மாதங்களில் இருந்த நிலைக்கு திரும்பி உள்ளது. இது, இத்துறைகளில் முதலீடுகள் உயர வழிவகுக்கும்.எஸ்.சி.கார்க் செயலர், மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|