பதிவு செய்த நாள்
03 ஜன2018
00:22
புதுடில்லி:மொபைல் போன் அழைப்புகளின் இணைப்பு தொடர்பான விதிமுறைகளை, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான – ‘டிராய்’ வெளியிட்டு உள்ளது.அதில், ‘தொலை தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு இடையே, மொபைல் போன் அழைப்புகளுக்கு இணைப்பு கொடுப்பது தொடர்பாக, 30 நாட்களுக்குள், ஒப்பந்தம் செய்ய வேண்டும்; இந்த விதிமுறையை மீறும் நிறுவனங்களுக்கு, தினமும், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொலை தொடர்பு அழைப்புகளை இணைக்க உதவும் முனையங்களின் சேவையை, நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ளுதல்; துவக்க காலத்தில், ஒரு நிறுவனத்தின் தொலை தொடர்பு சேவைக்கு இணைப்பு வழங்குவது உள்ளிட்ட விதிமுறைகளையும், ‘டிராய்’ வகுத்துள்ளது.மேலும், முனையங்களின் சேவை துண்டிப்பு, கட்டண நிர்ணயம், இணைப்பில் ஏற்படும் பிரச்னைகளுக்கு விதிக்கும் அபராதம் ஆகியவை குறித்த விதிகளும் வெளியிடப்பட்டு உள்ளன.புதிய விதிமுறைகள், பிப்., 1 முதல் அமலுக்கு வருவதாக, ‘டிராய்’ தெரிவித்துள்ளது.போட்டி நிறுவனங்கள், போதிய இணைப்பு வசதி வழங்குவதில்லை என, ஆர்ஜியோ நிறுவனம் புகார் கூறிய நிலையில், புதிய விதிமுறைகளை, ‘டிராய்’ வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|