பதிவு செய்த நாள்
03 ஜன2018
00:24
புதுடில்லி:டில்லியைச் சேர்ந்த, லெமன் ட்ரீ ஓட்டல்ஸ் நிறுவனம், பங்கு வெளியீடு மேற்கொள்ள, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ ஒப்புதல் வழங்கி உள்ளது.இதையடுத்து இந்நிறுவனம், விரைவில் பங்கு விற்பனையை மேற்கொள்ளும் என, தெரிகிறது.
இப்பங்கு வெளியீட்டை, கோட்டக் மகிந்திரா கேப்பிட்டல், சி.எல்.எஸ்.ஏ., இந்தியா, ஜே.பி.மார்கன் இந்தியா, யெஸ் செக்யூரிட்டிஸ் ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்க உள்ளன.நிறுவனம் அதன், ‘பிராண்டு’ மதிப்பை உயர்த்தவும், முதலீடுகளை திரும்பப் பெறும் வாய்ப்பை ஏற்படுத்தவும், இப்பங்கு வெளியீட்டில் இறங்குகிறது.
பட்டு கேஸ்வானி என்பவரால், 2002ல் துவக்கப்பட்ட, லெமன்ட் ட்ரீ ஓட்டல்ஸ் நிறுவனத்திற்கு, 24 நகரங்களில், 40 ஓட்டல்களும், 4,300 ஓட்டல் அறைகளும், 4,000க்கும் அதிகமான பணியாளர்களும் உள்ளனர்.இந்நிறுவனம், லெமன் ட்ரீ பிரீமியர், லெமன் ட்ரீ ரிசார்ட்ஸ், லெமன் ட்ரீ ஓட்டல்ஸ் மற்றும் ரெட்பாக்ஸ் ஓட்டல்ஸ் என, நான்கு, ‘பிராண்டு’களில், ஓட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|